மதுபாட்டில் விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் பகுதியில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தியாகதுருகம் சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் மது பாட்டில் விற்ற கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்த வேலு, 49; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, அவரிடமிருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement