டிராக்டரில் சிக்கி குழந்தை பலி

பென்னாகரம்:

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ரகுமான். இவர் காதல் மனைவி கீர்த்தனா. இவர்களது மகன் செனாவ், 4. வரலட்சுமி விரதத்தை-யொட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அருகே உள்ள வேடிக்கோட்டையிலுள்ள தன் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர்.

நேற்று மாலை, வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை வெளியே ஓடி வந்துள்ளான். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி பலியானான். பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement