ஈரானுக்கு எதிரான பொருளாதார அதிரடி நடவடிக்கை இறுதிக்கட்டம்: அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான பொருளாதார அதிரடி நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அதிபர் டிரம்ப் ஈரானின் ராணுவத் திறன்களைச் சிதைத்து, அதன் ராணுவத் தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட 100 சதவீதத்தை அழித்து, அதன் அணுசக்தித் திட்டத்தையும் புதைத்துவிட்டார். நாம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஈரானுக்கு எதிரான பொருளாதார அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்.
ஒரு பொருளாதாரப் பேரழிவு நாள் துவங்குகிறது; ஒரு எதிரிக்கு எதிராக இதுவரை எடுக்கப்படாத மிகப்பெரிய நிதித் தாக்குதல் இதுவாகும். ஈரானை எதிர்ப்பதால் ஏற்படும் ஆபத்துக்கு அஞ்சுபவர்கள், அமெரிக்காவை சோதிப்பதற்கான விலையைக் குறைத்து மதிப்பிடக்கூடாது.
ஒவ்வொரு அதிகாரத்தையும், ஒவ்வொரு செயலையும் அதிபர் டிரம்ப் திறம்பட நடவடிக்கை எடுத்து வருகிறார். ஈரான் தனித்து நிற்கும் வரை, அந்த கொடுங்கோல் ஆட்சியைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பொருளாதார உயிர்நாடியையும் துண்டிப்பதே நமது நோக்கம். இவ்வாறு ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.
மேலும்
-
உத்திரமேரூரில் சேதமடைந்த தெரு பெயர் பலகைகள்; புதிதாக அமைக்க மக்கள் கோரிக்கை
-
அரசு பள்ளியில் பல்லி கிடந்த உணவு விநியோகம்; மயக்கமடைந்த 19 மாணவ - மாணவியர் 'அட்மிட்' ; பதறி ஓடிய பெற்றோர்; திணறிப்போன ஆசிரியர்கள்
-
செங்கல் சூளையில் பணியாற்றிய வடமாநில சிறுவர்கள் மீட்பு
-
அங்கனாமலை அம்மையப்பர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு
-
இளையோர் செஞ்சிலுவை சங்கம் அரசு பள்ளியில் தொடக்கம்
-
அச்சுறுத்துவது போல முதல்வர் பேசுவதா?