லாபம் தரும் ஆடு வளர்ப்பு விவசாயிகளுக்கு அறிவுரை

திருப்பூர், ஆக. 25–



திருப்பூர் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. மையத்தலைவர் மதிவாணன், டாக்டர் ஆஷா ஆகியோர், வெள்ளாடு வளர்ப்பு, தீவன மேலாண்மை மற்றும் நோய் தடுப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.



குறைந்த முதலீட்டில் இறைச்சி, பால் உற்பத்தி மூலம் நல்ல லாபம் பெறலாம் என்றும், முறையான கொட்டில், தரமான தீவனம் மற்றும் தடுப்பூசி மூலம் ஆடு வளர்ப்பை சிறந்த தொழிலாக மாற்றலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement