கல்லூரிகளை கண்காணிக்க போலீஸ் புது திட்டம்

கோவை: மாநகர போலீசார்  நேற்று அதிகாலை, கல்லுாரி மாணவர்கள் தங்கும் வீடுகள், விடுதிகளில் ஆய்வு செய்தனர்.

மாநகர போலீஸ் அலுவலர் கூறியதாவது:

கல்லுாரிகளில் கட்டுப்பாட்டு மையம் உருவாக்கி, அங்கு பொருத்தப்பட்டுள்ள ‘சிசிடிவி’ கேமராக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படவுள்ளன. அவசியம் ஏற்பட்டால், கல்லுாரி நுழைவாயில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை, போலீஸ் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைத்து கண்காணிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கல்லுாரி வளாகங்களில் நடக்கும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கண்டறிந்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் .

இவ்வாறு, அவர் கூறினார். 

Advertisement