வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு; அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

21


சென்னை: கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது.

சென்னை கொளத்துார் தொகுதியில், த.வெ.க., - எம்.எல்.ஏ., பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி, தி.மு.க., வேட்பாளரும், அக்கட்சி தலைவருமான ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முறைகேடுகள் நடந்துள்ளதால், இரண்டாம் இடத்தில் உள்ள என்னை வெற்றி பெற்றதாகவும் அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 25) ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஸ்டாலின் தரப்பில் அவசர வழக்காக விசாரிக்க முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது. வழக்கு அடுத்த வாரம் திங்கள் கிழமை ஆகஸ்ட் 31ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.



சிறப்பு வீடியோ




கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபு வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் வழக்கு: ஐகோர்ட் முக்கிய அறிவிப்பு என்ன; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement