கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை: வேல்வார்கோட்டை செட்டியபட்டியில் கற்பக விநாயகர், சக்தி விநாயகர், மகா காளியம்மன், முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

ஆக.,22ல் தீர்த்தம், அழைப்புடன் துவங்கி நேற்று காலை வரை 4 கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அபிராமியம்மன் கோயில் அர்ச்சகர் அஜித்குமார் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

Advertisement