மருத்துவமனையில்தீ தடுப்பு ஒத்திகை

பரங்கிப்பேட்டை, ஆக. 26–பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில், தீ தடுப்பு மற்றும் மீட்பு பணி ஒத்திகை நடந்தது. தலைமை மருத்துவர் விக்னேஷ் தலைமை தாங்கினார். தீ விபத்து ஏற்பட்டால்மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், தீயை அணைக்கும் முறைகள் மற்றும் அவசரக்கால மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு நிலையஅலுவலர் ஜெயக்குமார் பயிற்சி அளித்தார்.நிகழ்ச்சியில், டாக்டர்கள், பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு படையினர்பங்கேற்றனர். 

Advertisement