கணவர் மாயம் மனைவி புகார்

குள்ளஞ்சாவடி: கணவரை காணவி ல்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

குள்ளஞ்சாவடி அடுத்த வசனாங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜா ராமன்,34; தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த இவர், கடந்த 24ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது மனைவி கயல்விழி அளித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement