செஞ்சியில் நான்கு வழிச் சாலை விரிவாக்க பணி ஆய்வு
செஞ்சி: செஞ்சி - விழுப்புரம் இடையே நடந்து வரும் நான்கு வழி சாலை விரிவாக்க பணியை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
ஆற்காடு - விழுப்புரம் தேசிய நெடுஞ் சாலையில் செஞ்சி உட்கோட்டத்திற்கு உட்பட்ட செஞ்சி - விழுப்புரம் சாலையில் மட்டப்பாறை கிராமம் வரை ரூ.85 கோடி மதிப்பில் 13.50 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது .
இந்த பணியை நேற்று சென்னை மண்டல தலைமை பொறியாளர் பழனிவேல் ஆய்வு செய்தார்.
அப்போது பணியை தரமாகவும், வடகிழக்கு பருவமழைக்கு முன்பும் முடிக்க அறிவுறித்தினார் .
ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன், கோட்ட பொறியாளர்கள் நாராயணன், ஸ்ரீகாந்த் மற்றும் உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபை டிராமா மன்றமாக மாறிவிடக் கூடாது; அண்ணாமலை
-
போதைப்பொருள் பழக்கத்தை தடுப்பதில் விளையாட்டுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி
-
கான்பூரில் பயிற்சி விமானம் விபத்து; பைலட்டுகள் இருவர் பலி
-
உயிர்ம வேளாண்மையில் சாதனை; விவசாயிகள் மூவருக்கு விருது வழங்கினார் முதல்வர் விஜய்
-
கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டி; இந்தியாவின் பிரக்ஞானந்தாவுக்கு பின்னடைவு
-
100 இந்தியர்கள் இருக்கும் இடம் தெரிந்தது
Advertisement
Advertisement