தமிழர்கள் மீட்க நேபாளம் விரைகிறது தமிழக குழு
சென்னை: நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்டு அழைத்து வருவதற்கு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு ஒன்று காத்மாண்டு செல்கிறது. மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் டில்லி செல்கின்றனர்.
திபெத்தில் நேற்று பிரமாண்ட பனிப்பாறை உருகி, அங்குள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, அதிகளவு நீர் நேபாளத்தில் உள்ள கோஷி ஆற்றில் கலந்து, திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், வழியில் இருந்த பாலங்கள், கட்டடங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த திடீர் பேரழிவில், 359 பேர் பலியாகினர். 133 இந்தியர்கள் உட்பட 1,500 பேர் மாயமாகியுள்ளனர்.
திடீர் வெள்ளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, தலைமைச்செயலர் சாய்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளர் மணிவாசன், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், பொதுத்துறை செயலாளர் சுந்தரவல்லி, தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை இயக்குனர் சதீஸ்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், புதுடில்லி தமிழ்நாடு இல்ல உள்ளூறை ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையில் ஒரு குழு நேபாளம் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மீட்கப்பட்டுள்ள 20 தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவும் தொடர்பு கொள்ள முடியாதவர்களின் நிலையினை கண்டறிந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தி, மருத்துவ உதவிகளை வழங்கவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத், ஐஏஎஸ் அதிகாரி சதீஷ் டில்லியில்உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டு மீட்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு, மீட்கப்பட்ட தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும்உளவியல் ஆலோசனைகளை மருத்துவ குழுவினர் வாயிலாக வழங்கவும், பத்திரமாக தமிழகத்திற்கு அழைத்து வரவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.
49 பேர் மாயம்
இதனிடையே சென்னையில் இருந்து நேபாளம் சென்ற 49 பேர் குறித்த தகவல்களை பெறவும், மீட்புப்பணிகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 21 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என மத்திய அரசும் தெரிவித்துள்ளது.
இருக்கும் பிரச்சினையில் நீங்க வேற!!! சும்மா இருங்க போதும்... மத்திய அரசு பார்த்துக்கொள்ளும்... பத்திரமாக திரும்பி வரும்வரை அவர்கள் குடும்பத்துக்கு துணையாக இருங்கள்
நீங்க்க போயி என்ன செய்வீர்கள். அங்கே போயி ஹிந்தி தெரியாது போடா என்று சத்தம் போரீங்களா? எல்லாம் மத்திய அரசு செய்யும்.
மரியவில்சனை அனுப்புங்க...அங்க போய் ஏசுவின் கிருபையால் கைலாஷ் பரிக்ரமா &முகதிநாத் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டார் கள்.. தோத்திரம்......த்திரம் என்று சொல்லி தசமபாகத்துக்கும் பாவமன்னிப்புக்கும் அடி போடுவான்.... சாத்தான்களும் விரியன் பாம்பு குட்டிகளும் தமிழகத்தை விட்டு வெளியே போய் ஹிந்துக்களை மீட்க வேண்டும் என இங்கு யாரும் வேண்டிக் கிடைக்கவில்லை..
தமிழக அரசு நேபாளில் போய் என்ன செய்ய முடியும். உங்களின் அதிகார வரம்பு தான் என்ன ? எதன் அடிபடையில் நீங்க நேபாள அரசிடம் உதவி கேட்க முடியும். இந்திய அரசு உதவிகளை செய்ய தொடங்கிவிட்டது . நிவாரண பொருட்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினரை அனுப்பி உள்ளது . இந்தியா தூதரகம் கண்ட்ரோல் ரூம் நம்பர் குடுத்து எல்லா இந்தியர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்துக்கொண்டு ருக்கும் வேளையில் தமிழக அரசு ஒரு குழுவினை அனுப்புவது என்பது தேவையற்ற வேலை. நீங்கள் அங்கே பொய் மீட்கப்பட்ட தமிழர்களோடு உரையாடி தமிழக முதல்வர்க்கு நன்றி என்று சொல்ல சொல்லி ஒரு போட்டோ செஷன் எடுத்து விளம்பரம் தேடும் வித்தைகளை விட்டு விட்டு நல்ல அரசியல் செயுங்கள் .
டில்லியில் உள்ள தமிழ் நாடு ஹவுஸில் இருந்து நேபாளத்தில்......
கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது மனிதாபிமான முறையில் உடனடியாக செயல்பட்டு இருக்கலாம்.... ஆட்சி, அதிகாரம் இருந்தால் மட்டுமே உதவ வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது...
சூப்பர் சூப்பர். அடுத்தது 21 பேரை மீட்டது தமிழக அரசு என்று லேபிள் ஒட்டிக்க வேண்டியது தான் நம்முடைய விடியல் போல.
தவறில்லை மத்திய அரசு தன்னாலான முயற்சிகளைச் செய்யும் எனினும் பிரச்சினையில் இருப்பவருக்குத் தனது தாய் மொழியில் பேசுபவருடம் மனம் விட்டுப் பேச முடியும். அம்மொழியில் கேட்டால் மனத்துக்கு ஒரு ஆறுதல். தனக்கு உதவத் தனது அரசு முன்வருகிறது என்றதொரு எண்ணம் நல்லதே மேலும் இது ஒரு அரசியல் ஆதாயம் தேடும் செயல் என்றாலும் காலத்தின் கட்டாயம். மத்திய அரசுக்கு கடிதம் எழுதி எங்கள் மக்களைக் காப்பாற்ற வேண்டுமென திமுக நாடகமாடுகிறதே அவர்களிடம் இந்தக் கேள்வியை கேட்க வேண்டாமா? அவர்கள் ஆட்சியில் இல்லாத காரணத்தால் அதைத்தான் செய்ய முடியும் ஆனால் ஆட்சியில் இருப்பவர் அதைவிட அதிகமாக செய்து காட்ட வேண்டாமா? விஜய் சரியாகவே வழி நடத்தப்படுகிறார்.
இந்தியர்களை மீட்க மத்தியரசுக்கு தெரியாதா இந்த மாதிரி பிரிவினை பேசுற சினிமா அரசுக்கு எதற்காக இந்த வேலை முதல்ல இந்த மாதிரியான பிரிவினை பேசுற அரசை கலைக்க வேண்டும்மேலும்
-
இரண்டாவது கட்டமாக 37.5 டன் நிவாரண பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பியது இந்தியா
-
தென்பெண்ணை ஆற்றில் கழிவுர் தேக்கத்தால் துர்நாற்றம்
-
மேல்சிறுவளுர் கூட்ரோட்டில் பெங்களூரு செல்ல வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா
-
மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது
-
ரோட்டில் தவற விட்ட ரூ.2 லட்சம் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
-
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு நாளை 29ம் தேி சிறப்பு முகாம்