மதுபாட்டில் கடத்தல்: 2 பேர் கைது
விழுப்புரம்: மயிலம் அருகே புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு ஐவேலி முருகன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், வந்தவர்கள் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், பேரணி அடுத்த கெண்டியாம்பாக்கம் திருநாவுக்கரசு, 42; புதுச்சேரி மாநிலம், மண்ணாடிப்பட்டு சுரேஷ், 47; என்பதும் தெரியவந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து 269 மது பாட்டில்கள் மற்றும் புதுச்சேரி மாநில பாக்கெட் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்; அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
ஏரியின் பெயரை மாற்றினார் டிரம்ப்; கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு
-
கிராண்ட் செஸ் டூர்; முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா
-
வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் தொட்டி ஏலம்
-
நகராட்சி அலுவலர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம்
-
மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள்
Advertisement
Advertisement