பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தவில்லை: தேர்தல் வழக்கில் முதல்வர் விஜய் மனு
சென்னை: பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தவில்லை. வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் முதல்வர் விஜய் மனு தாக்கல் செய்துள்ளார்.
முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் வாக்காளர்கள் லட்சுமி நரசிம்மன், தினேஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கு கடந்த 25ம் தேதி விசாரணைக்கு வந்த போது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும்,அதற்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என முதல்வர் விஜய் தரப்பில் கேட்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் இன்று( ஆக.,27)க்குள் தேர்தல் வழக்கு நிராகரிக்கக்கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனுவில், குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறு. இதற்காக எனது வெற்றியை செல்லாது என அறிவிக்க இயலாது. செலவு கணக்கு, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும், வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை எனத் தெரிவித்து உள்ளார்.
வெட்டி வழக்கு. முடிவு எடுக்க வேண்டியது அரசியல் சாசன தேர்தல் ஆணையம். சட்ட விதிகள் இல்லை என்றால், தேர்தல் வழக்கை நீதிமன்றத்தில் முடிக்க முடியாது. வழக்கறிஞர் வருமானத்திற்கு தான் உதவும். தவறான வழக்கு தொடுக்கும் நபர் பாதிக்கப்படும் எதிர் மனுதாரர் செலவு மொத்தம் கொடுக்க விதிகள் வேண்டும். ஏராளமான வழக்குகள் மக்களை வாட்டி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் ஆட்சியை காப்பாற்ற மட்டும் தான் சிந்திக்கின்றன.
பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தினால் என்ன தவறு பிரச்சாரத்தில் எந்த யுக்தியையும் கையாளலாம். திருட்டு கொள்ளைக்கார கும்பல் திமுகவை ஒழிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
தவெகவின் விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுமாறு உங்கள் பெற்றோர்களை நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்று பேசி குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதற்கு ஆதாரம் இருக்கிறது. மேலும் திமுக மாதிரி எல்லாருக்கும் என்று சொல்லிவிட்டு அதுல தகுதி Fix பண்ணி பாகுபாடு காட்டி ஏமாற்ற மாட்டோம் எல்லாத்தையும் வெளிப்படையாக சொல்வோம் என்று தேர்தலின் போது சொன்ன இந்த விஜய் இப்போது அப்படியே பிளேட்டை மாற்றிப் போடுகிறார். திருட்டு திமுகவை கூட நம்பலாம் போல
ஆனால் இந்த தவெக நடிகர் விஜய் ஒண்ணாம் நம்பர் ஃபிராடாக இருக்கின்றார்.மேலும்
-
இரண்டாவது கட்டமாக 37.5 டன் நிவாரண பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பியது இந்தியா
-
தென்பெண்ணை ஆற்றில் கழிவுர் தேக்கத்தால் துர்நாற்றம்
-
மேல்சிறுவளுர் கூட்ரோட்டில் பெங்களூரு செல்ல வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா
-
மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது
-
ரோட்டில் தவற விட்ட ரூ.2 லட்சம் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
-
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு நாளை 29ம் தேி சிறப்பு முகாம்