உற்பத்தி, ஏற்றுமதிக்கான சர்வதேச மையமாக மாறும் இந்தியா: நிர்மலா சீதாராமன்
டொரோன்டா : உற்பத்தி, ஏற்றுமதி, சேவைக்கான சர்வதேச மையம் ஆக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கனடா சென்றுள்ள நிர்மலா சீதாராமன் டொரோன்டோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: இந்தியா வளர்ந்து வரும் சந்தை மட்டும் இல்லை. சர்வதேச உற்பத்தி, புதுமை, சேவை மற்றும் ஏற்றுமதிக்கான மையம் ஆக மாறி வருகிறது. சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மயம், உள்கட்டமைப்பில் முதலீடு, கொள்கை ஆதரவு ஆகியன நீண்ட கால முதலீட்டுக்கான சூழ்நிலையை வலுப்படுத்தி வருகின்றன.
கனடாவை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், இந்தியாவை வெறும் முதலீட்டுக்கான இடமாக மட்டும் பார்க்காமல், சர்வதேச வளர்ச்சிக்கான கூட்டாளி ஆகவும் பார்க்க வேண்டும். சர்வதேச சந்தைகளில் இந்தியா பரந்து செயல்படும் வகையில் நீண்ட கால செயல்பாடு மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
நிர்வாக, நீதிமன்ற, மத்திய, மாநில அதிகார சீர்திருத்தங்கள் தேர்தல் ஆணையம் போல் தெளிவாக, கால வரையறை செய்து இருக்க வேண்டும். சீர்திருத்தம் வழி தெரியாமல் முழிக்கிறது. டிஜிட்டல் மயம் முன்னேற்றம் . ஆனால் சுவிட்ச் பிற நாடுகள் வசம். உள் கட்டமைப்பில் முதலீடு கொள்கையில் மத்திய அரசு ஆதரவு கொடுத்தாலும் சமூக ஆர்வலர், பொதுநல மனுக்கள், எதிர்க்கும் கட்சிகள், தேச விரோத அமைப்புகள் தடையை எளிதில் அகற்ற முடியாத நிலை. ஊழல் இல்லை என்றாலும் நாட்டின் வளர்ச்சியை சட்ட ஓட்டைகள் மூலம் தடுக்க முடியும். நீதிமன்றம் வழக்கறிஞர் மூலம் பண பரிவர்த்தனை இடமாக மாறி வருகிறது. பண புழக்கம் அறிவது கடினம். சர்வ தேச மையமாக மாறும் முன் தாமிர ஆலை, நோக்கியா நிறுவன நிலை வராமல் தடுக்க வழி தெரிய வேண்டும்.மேலும்
-
இரண்டாவது கட்டமாக 37.5 டன் நிவாரண பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பியது இந்தியா
-
தென்பெண்ணை ஆற்றில் கழிவுர் தேக்கத்தால் துர்நாற்றம்
-
மேல்சிறுவளுர் கூட்ரோட்டில் பெங்களூரு செல்ல வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா
-
மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது
-
ரோட்டில் தவற விட்ட ரூ.2 லட்சம் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
-
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு நாளை 29ம் தேி சிறப்பு முகாம்