திருப்பாலைக்குடியில் கடற்கரை ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: திருப்பாலைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் மூலம் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள், அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் செல்வதற்கும், கடற்கரைக்கு செல்வதற்கும் அதிகம் பயன்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த ரோடு. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரோடு பல ஆண்டுகளாக சீரமைப்பு செய்யப்படாததால் ரோட்டில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, ரோடு குண்டும், குழியுமாக உள்ளது.

இதனால், அவ்வழியாக செல்லும் குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்துள்ள கடற்கரை ரோட்டை சீரமைக்க வலியுறுத்தினர்.

Advertisement