சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.86 லட்சம் பறிமுதல்

மதுரை: மதுரை மாவட்டம் செட்டிக்குளம் பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.86 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரை ஊமச்சிக்குளத்தில் உள்ள இந்த அலுவலகத்தில் நேற்று மதியம் 3:15 முதல் இரவு 7:30 மணி வரை லஞ்சஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜெயப்ரியா, ரமேஷ்பிரபு, குமரகுரு சோதனையில் ஈடுபட்டனர். கேமரா ஆபரேட்டர் முத்துமணியிடம் 35, இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பொறுப்பு சார்பதிவாளர் ராஜன் 40, என்பவருக்கு கொடுக்க வைத்திருந்த ரூ.1.83 லட்சம் பத்திர எழுத்தர்கள் சந்தோஷ்பாலாஜி 27, சிராஜூதீன் 30, அருண்பாண்டி 26, வெங்கடேசன் 37, பிரேம்குமார் 58, ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement