விநாயகர் சிலைகள் தயார்

வேடசந்துார், ஆக.29

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேடசந்துார் ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படும்.

இந்தாண்டு செப்.,14ல் கிராமங்கள் தோறும் 50 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளது. தொடர்ந்து செப்.,18ல் சிலைகள் ஊர்வலம் நடத்த ஹிந்து முன்னணி சார்பில் அனுமதி கேட்டுள்ளனர். வழிபாட்டுக்காக 50 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு வேடசந்துார் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

மாவட்ட செயலாளர் மாரிமுத்து கூறுகையில், ‘இந்தாண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம், கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Advertisement