திருமண வரவேற்பு விழா வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருமண வரவேற்பு விழாவிற்கு சென்றவர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த மழவராயனுாரை சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி லட்சுமி, 43; இவரது மகன் கவியரசன் திருமண வரவேற்பு விழா கோலியனுாரில் நேற்று முன்தினம் நடந்தது.
இதற்காக வீட்டை பூட்டிவிட்டு, லட்சுமி தனது குடும்பத்துடன் திருமண மண்டபத்திற்கு சென்றுவிட்டார். பின், இரவு 11:00 மணிக்கு திரும்பிவந்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த ஐந்தேகால் சவரன் நகைகள் மற்றும் 130 கிராம் வெள்ளி, 5,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லைட் ரீடிங்... களைகட்டிய கலைத்திருவிழா போட்டிகள் இசை, நடனம், நாடக திறமைகளை வெளிப்படுத்தி பள்ளி மாணவர்கள்
-
புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு சேவை உரிமை ஆவண திட்டம் செப். 1ல் அமல்
-
கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
-
டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி; இருவர் காயம்
-
2 மாதங்களில் 731 சாலை விபத்து 1,204 பேருக்கு அவசர சிகிச்சை
-
டவுன் பஸ் இயக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement