பல்லாயிரம் கோடி சொத்து கைவிட்டுப் போனது; 75 வயதில் வேலைக்கு போகிறார் சுபாஷ் சந்திரா
-நமது நிருபர்-
ஒரு காலத்தில் மீடியா உலகில் கோலோச்சிய சுபாஷ் சந்திரா, 75, கடனில் மூழ்கி நிறுவனங்கள் அனைத்தையும் இழந்த நிலையில், சுவிட்சர்லாந்தில் பணியில் சேரப்போவதாக தெரிவித்துள்ளார்.
எஸ்செல் குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா, 75. செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் அறிமுகமான காலத்தில் மீடியா உலகில் நுழைந்தவர். ஜீ டிவி என்ற பெயரில் அவர் தொடங்கிய நிறுவனம், பிரமாண்ட நிறுவனமாக வளர்ந்தது. 90 சேனல்கள், டிஷ் டிவி, எஸ்செல் வேர்ல்டு என்ற தீம் பார்க், டி.என்.ஏ., நாளிதழ் என அடுத்தடுத்து பல்வேறு நிறுவனங்களை தொடங்கினார்.
2016ல் ஹரியானாவில் இருந்து பாஜ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு தொழில்களை நடத்திய சுபாஷ் சந்திரா, கடந்த சில ஆண்டுகளாகவே தொழில் துறையில் பின்னடைவுகளை சந்தித்து வந்தார்.
அவரது கடன்கள் நாளுக்கு நாள் அதிகரித்தன. வாங்கிய கடன்களை செலுத்த முடியாமல், நிறுவனங்கள் ஒவ்வொன்றாக இழக்க நேரிட்டது. கடைசியில் அவரது கடன்கள் எக்கச்சக்கமாக சென்ற நிலையில், திவால் நோட்டீஸ் கொடுத்து விட்டார்.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அவரது கடன் உத்தரவாதக் கோரிக்கைகளுக்கு ரூ.6.5 கோடி செலுத்தும் வகையிலான மறுமதிப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தது. தனது சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் அந்த தொகையை செலுத்தி விடுவதாக சுபாஷ் சந்திரா அறிவித்துள்ளார்.
தன் பெயரில் குறிப்பிடப்படும் 22 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உத்தரவாதத்தை மறுத்துள்ள அவர், அந்த மதிப்பீடு தவறானது என்றும், உண்மையான புள்ளி விவரங்களை சில நாட்களில் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ''இன்னும் ரூ.3993 கோடி மதிப்பிலான கடன்களுக்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் நான் பொறுப்பாளர்.
ரூ.22 ஆயிரம் கோடி என்ற மதிப்பீடு தவறானது. கடந்த 2019ல் எங்கள் நிறுவனங்களுக்கு நெருக்கடி தொடங்கியபோது ரூ.45 ஆயிரம் கோடி கடன்கள் இருந்தன. அவற்றில் ரூ.43 ஆயிரம் கோடியை திரும்பச் செலுத்தி விட்டோம்,'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
தான் உருவாக்கிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கை விட்டுப் போன நிலையில், சுவிட்சர்லாந்தில் புதிய பணியில் சேர இருப்பதாகவும் சுபாஷ் சந்திரா அறிவித்துள்ளார். "நான் மீண்டும் சம்பாதிப்பேன், புதிய தொழில்களை உருவாக்குவேன்" என்று அவர் வெளியிட்ட வீடியோவில் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: எஸ்செல் குழுமத்தின் கடன்களை அடைப்பதற்காக சொந்த வீடு உள்ளிட்ட பெரும்பாலான தனிப்பட்ட சொத்துக்களை விற்றுவிட்டேன். தற்போது, சுவிட்சர்லாந்தில் முதலீட்டுப் பணிகள் செய்யும் என் நண்பர்களுடன் இணைந்து பணியாற்ற ஒரு திட்டம் வைத்துள்ளேன்.
அடுத்த 1-2 வாரங்களில் அதன் விவரங்களை உங்களுக்குத் தருகிறேன். மேலும், குடும்பத்தினரிடமிருந்து 2-4 கோடி ரூபாய் கடன் வாங்கி, முன்னேற்ற பாதையில் உள்ள எங்களின் சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
எனினும், சுபாஷ் சந்திரா தொடர்பான வழக்கில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அளித்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக, எச்.டி.எப்.சி., வங்கி உள்ளிட்டவை அறிவித்துள்ளன.
இந்நாட்டில் ஆளும் கட்சி புள்ளிகளுக்கு வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கடன்களை வாரி வழங்கி சொகுசு வாழ்க்கை நடத்த ஏற்பாடுகள் செய்கின்றனர்.
2016ல் ஹரியானாவில் இருந்து பாஜ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். அதனால் தான் 22,000 கோடியை ஆட்டையைப் போட்டு விட்டு வெறும் ஆறரை கோடி செட்டில் பண்ணி விட்டு எல்ஐசிக்கும் ஹெச்டிஎஃப்சிக்கும் குழைத்து நாமம் சாற்றி விட்டு ஸ்விட்சர்லாந்தில் “இந்திய வங்கிகளை மொட்டை அடிப்பது எப்படி “ என்று டூல்கிட் தயாரித்து விற்கும் வேலை பார்க்கப் போறார் போல.
பாரதத்தின் மிகப்பெரிய பிஸினஸ் டைகூன்களில் ஒருவரான சுபாஷ் சந்திரா அவர்களால், அக்டோபர் 1992-ல் மும்பை லோயர் பரேலில் ஆரம்பிக்கப்பட்ட Zee டிவி, ஏராளமான நல்ல நல்ல நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் வழங்கியது. Zee டிவி அசுர வேகத்தில் வளர்ந்து ஊழியர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை கடந்தது. காரணம், Zee டிவி-யில் சத்தியத்தை மட்டும் தான் ஒளிபரப்பு செய்வார்கள். அனைத்து நிகழ்ச்சிகளும் உயர்ந்த தரத்தில் இருந்தன. மக்கள் ஆதரவு அமோகமாக இருந்தது. பிறகு யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை.
பிறகு, Zee டிவி நிகழ்ச்சிகள் தேசவிரோத கட்சிகளுக்கு ஆதரவான நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் வழங்கினர். அந்த நிகழ்ச்சிகள் பார்ப்பவர்கள் அனைவருக்கும் உள்ளூர் கண்றாவி டிவியான சன் டிவியை பார்த்தது போல் முகம் சுளிக்கும் படி வைத்தன..
பார்வையாளர்கள் எண்ணிக்கையும், விளம்பர வருமானமும் வெகுவாக குறைந்தது. Mumbai Zee TV Headquarters அலுவலகத்தில் TOP OFFICIALS-களுக்கிடையே அன்றாடம் சண்டை நடந்தது. ஊழியர்களின் எண்ணிக்கை 2500 ஆகக் குறைந்தது. சுபாஷ் சந்திரா Zee TV ஐ SONY Network-க்கு தவிட்டு விலைக்கு விற்று விட்டார்.
நல்லவர்கள், கெட்டவர்களோடு சேர்ந்தால், நல்லவர்களுக்கு தான் அழிவு வரும். அல்லது நல்லவர்கள் ஏமாற்றப்படுவார்கள்.
பெரிய தலைவராக, பெரிய அறிவாளியாக பாரதம் முழுவதும் மக்களால் போற்றப்பட்ட, மிகவும் நல்லவருமாக விளங்கிய ராஜாஜி ஈவிஆரிடம் சோரம் போனார். அப்போது திகவிற்குள் மகாபாரத யுத்தம் நடந்து, அண்ணாத்துரை தலைமையில் திமுக ஜனித்தது.
1967 தேர்தலுக்காக தன்னுடைய சுதந்திரா கட்சியை திமுகவோடு கூட்டணி அமைப்பதற்காக, ஈவிஆரை விட்டு விலகி, ராஜாஜி அண்ணாத்துரையிடம் சோரம் போனார். தேர்தலில் ராஜாஜி வெற்றியும் பெற்றார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு திமுகவினர் ராஜாஜியை ஏமாற்றி விட்டார்கள். தீயவர்களோடு சேர்ந்த காரணத்தால், பெரும் புகழுக்குரிய ராஜாஜியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது.
மிகவும் நல்ல தலைவர்களான ஜி. ராமகிருஷ்ணன், டி.கே. ரங்கராஜன் ஆகியோர் 2021 அசெம்பிளி தேர்தலுக்காக அறிவல்லாத்த ஆலயத்திற்குச் சென்று திமுகவிடம் சோரம் போனார்கள். நல்லவர்களான கம்மீஸ் இன்று "ONE FOOT IN TVK AND ANOTHER FOOT IN DMK" என்று இரண்டுங்கெட்டான் அரசியல் செய்துகொண்டு காலத்தை கடத்துகிறார்கள்.
திமுகவின் ஃபாஸிசத்தை எப்போதும் எதிர்ப்பதாகக் கூறியதற்காக மக்களின் பேரன்பையும், பாராட்டுகளையும் பெற்ற கமல்ஹாசன் கடைசியில் திமுகவிடம் சோரம் போனார். தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும், திமுகவிடம் சரணடைந்து ராஜ்யசபா மெம்பராக ஆகிவிட்டார். வல்லவரான இவருக்கு கெட்டவர்களான திராவிடர்கள் எப்போது இவருக்கு தீங்கு செய்யப் போகிறார்கள்? என்பது யாருக்கும் தெரியாது.
மேற்கூறிய விஷயங்களிலிருந்து, நல்லவர்கள் இந்த கஷ்டங்கள் வந்தாலும், தொடர்ந்து தங்கள் பணிகளை செய்து கொண்டு போனால், வெற்றி கிடைக்கும். குறுக்கு வழியில் வெற்றி பெற நினைத்து கெட்டவர்களுடன் சேர்ந்தால், நல்லவர்களுடைய பணிகள் தடைபட்டு எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும்.
ஹரியானாவில் இருந்து பாஜ கட்சி ஆதரவுடன் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
This is total fraud
விடுங்க பாஸ்.. நம்பாளு இருக்காங்க. அதான் மிஸ்டர் பொதுஜனம் அவங்க கிட்ட இருந்து மினிமம் பாலன்ஸ் மாதிரி எதாவது ஒரு பெயர் சொல்லி வசூல் பண்ணிடலாம்.
திவால் நோட்டீஸ் கொடுத்ததபின்னும் இவரை நம்பி நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் கோடி கணக்கில் முதலீடு செய்ய இருக்கிறார்களாம். பொய். எல்லாம் பினாமி பெயரில் வைத்திருக்கும் சொத்துக்களாயிருக்கும்.
எல்லாம் ஒருபுறம் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும்போது இந்த ஆளுக்கு மட்டும் எப்படி அதே துறையில் நஷ்டம் ஏற்பட்டிருக்கமுடியும்?
அந்த அளவுக்கு உத்தரவாதமே இல்லாமல் யார் இவருக்கு கடனை வாரி வழங்கினார்கள்? இந்த நஷ்டத்திற்கு யார் பொறுப்பு?
பெரும்பாலான சானல்கள் நஷ்டத்தில்தான் நடக்கின்றன. அதிலும் செய்தி சானல்கள் நிலைமை படுமோசம். அரசியல் பின்புலம் இருந்தால் மட்டுமே தப்பிக்கின்றன. சமூக வலைத்தளங்களால் DTH சானல்களுக்கு கடும் பாதிப்பு.
இதற்கும் அரசுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. தீர்ப்பாயம் கோர்ட் போன்ற சுதந்திரமான அமைப்பு. தொழில் நன்றாகச் செல்லும்போது அரசுக்கு நல்ல அளவில் வரிகளையும் கட்டணங்களையும் செலுத்தும் காலத்தில் அளிக்கப்பட்ட கடன்கள். சில தவறான வியாபார முடிவுகள் மூலம் வீழ்ச்சியடையும் குழுமங்களை குற்றவாளிகளாகப் பார்ப்பது தவறு. வரிஏய்ப்பு, சொத்து மறைப்பு போன்ற குற்றங்களுக்கு ஆதாரங்கள் இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும். எடுக்க வேண்டும். மற்றபடி தோல்வியடைந்த நிறுவன உரிமையாளர்கள் அனைவரையுமே கிரிமினல்களாக வர்ணிப்பது புதிய தொழில்முனைவர்களை பயமுறுத்தி வெளியேற்றும்.
இதற்கும் அரசுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. இவங்கப்பன் குதிருக்குள் இல்லையாம்.
அளவுக்கு மிறிய கடன்
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது - திருக்குறள் 377 கோடிக் கணக்கான பொருள் இருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.
"எஞ்ஞான்றும் பொருந்தும் எங்கள் குறள்மறை""
உலகப் பொதுமறை திருக்குறளைக் கையாண்டமைக்கு மிகவும் நன்றி பொருத்தமான குறளைச் சுட்டிக்காட்டிக் கருத்துரைத்தமைக்குப் பாராட்டுக்கள், திரு.பாலசுப்பிரமணியன்
அருமையான குறள்! இதுவரை தெரிந்து கொள்ள வில்லை! பொருத்தமாக கையாண்டு விளக்கியமைக்கு பாராட்டுக்கள்.மேலும்
-
வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டம்
-
கராத்தே: 955 பேர் உற்சாகம்
-
எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கை அரசு பேருந்தை முறையாக இயக்க மனு
-
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார் நகலை சமர்ப்பிக்கணும்
-
மாகறலில் குழாய் உடைந்து தினமும் வீணாகும் குடிநீர்
-
வாலிபர் வெட்டி படுகொலை முன்விரோதத்தால் வெறிச்செயல்