டெங்கு கட்டுப்படுத்த மாநகராட்சி புது திட்டம்

கோவை: மாநகர பகுதிகளில் அதிகளவுள்ள டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநகராட்சி புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘100 வார்டுகளில் உள்ள பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, விடுதிகளுக்கு 15 வகை பட்டியலுடன் சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வார்டு சுகாதார ஆய்வாளர் தன் எல்லைக்குட்பட்ட கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் ஆய்வு செய்வார். அப்போது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதிலுள்ள தகவல்களை அவர் நேரில் உறுதி செய்ய வேண்டும். டெங்கு பரவும் வகையில் அலட்சியமாக செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Advertisement