பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம்   

நடுவீரப்பட்டு: பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு சார்பில், மறுகட்டமைப்புக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் மீனாம்பிகை தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார்.மேலாண்மைக் குழு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், வரும் அக்.10ம் தேதி நடக்க உள்ள பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு சம்மந்தமாகவும், மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியில் இருந்த பள்ளி மேலாண்மைக்குழுவின் பணிகள் குறித்த ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் சசிகலா நன்றி கூறினார்.

Advertisement