23,000 ரூபாய்க்கு நிலவில் ஒரு ஏக்கர் நிலம்; இப்படியும் நடக்கிறது நூதன மோசடி
-நமது நிருபர்-
வருங்கால மனைவிக்கு, வித்தியாசமான பரிசு தருவதற்காக, இணையதளத்தில் தேடி, நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிய இன்ஜினியர் சரவணன், 32 , என்பவர், 23,000 ரூபாய் பணம் கட்டி, அதற்கான ஆவணங்களையும் பெற்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் சரவணன், 32. இன்ஜினியரிங் பட்டதாரி. இவருக்கும், மதுரையை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தன் வருங்கால மனைவிக்கு வித்தியாசமான திருமண பரிசு வழங்க சரவணன் திட்டமிட்டார்.
இதற்காக இணையத்தில் தேடியபோது, நிலவில் இடம் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் வந்ததை பார்த்துள்ளார். அதை உண்மை என நம்பிய சரவணன், அந்த இணையதள முகவரியை தொடர்பு கொண்டு, தன் வருங்கால மனைவி பெயரில், நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்குவதற்காக முன்பதிவு செய்தார்.
இதற்காக அவரிடம், 23,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நிலவில் சந்திராயன் விண்கலம் தரையிறங்கிய பகுதியான, 'ஸ்டேடியா சிவ சக்தி' என்ற இடத்தில், ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி, சரவணனுக்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அத்துடன், அவரது வருங்கால மனைவி, செப்., 17ல் நிலவுக்கு புறப்படும் வகையில் பயண டிக்கெட் வழங்கியதாக தகவல் பரவியது. சரவணன் கூறுகையில், ''வருங்கால மனைவிக்காக நிலவில் இடம் வாங்கியுள்ளேன். நிச்சயம் அங்கு செல்வோம்,'' என்றார்.
@block_G@
இது முற்றிலும் மோசடி
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: சர்வதேச விண்வெளி சட்ட விதிகள்படி, நிலவில் எந்த ஒரு தனி நபரோ அல்லது தனியார் நிறுவனமோ நிலத்தை வாங்கவோ, விற்கவோ அல்லது உரிமை கொண்டாடவோ துளியும் அனுமதியில்லை.
கடந்த, 1967ல் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விண்வெளி ஒப்பந்தப்படி, நிலவு உள்ளிட்ட விண்வெளி பொருட்கள் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கோ, பயன்பாட்டிற்கோ அல்லது தனிநபர் உரிமைக்கோ உட்படாது.
விண்வெளி என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பொதுவான சொத்து. நிலவில் நிலம் வாங்கி தருவதாக கூறி சரவணனிடம், 23,000 ரூபாய் வசூல் செய்துள்ளது முற்றிலும் ஏமாற்று வேலை. இவ்வாறு அவர்கள் கூறினர்.block_G
வாசகர் கருத்து (34)
theruvasagan - ,
30 ஆக்,2026 - 22:09 Report Abuse
இது சதுரக்காரனுக்கு தெரிஞ்சா மொத்த நிலாவையும் வளச்சு போட்டடுவான். தமிழகத்துல இனி வாங்க ஒண்ணும் இல்லை. மொத்தத்தையும் கபளீகரம் பண்ணியாச்சு 0
0
Reply
subramanian - Mylapore,இந்தியா
30 ஆக்,2026 - 21:43 Report Abuse
சார்.... செவ்வாய் கிரகத்தில் ஒரு ஏக்கருக்கு இருபதாயிரம் மட்டுமே.... முதலில் வரும் 2 கோடி பேருக்கு 15 சென்ட் கூடுதலாக வழங்கப்படும் 0
0
Reply
கங்காதரன் - ,
30 ஆக்,2026 - 17:10 Report Abuse
ஆகா நீ அல்லவா தேவை எதிர்கால இந்தியவிற்க்கு. 0
0
Reply
இளந்திரயன் வேலந்தாவளம் - ,
30 ஆக்,2026 - 16:56 Report Abuse
நீ உள்ளூர் கேனையன் இல்லை international கேனையன் 0
0
Reply
Sainathan Veeraraghavan - Ontario,இந்தியா
30 ஆக்,2026 - 16:13 Report Abuse
HOW HE GRADUATED AS ENGINEER. MUST BE A FAKE DEGREE. WHEN PEOPLE ARE READY TO GET CHEATED THERE ARE LOT OF CONMEN IN INDIA. 0
0
Reply
பேசும் தமிழன் - ,
30 ஆக்,2026 - 14:27 Report Abuse
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்....
எப்படி இன்ஜினீயரிங் படித்தாரோ... இப்படி ஏமாந்து போய் நிற்கிறாராரே !!! 0
0
Reply
Indhuindian - Chennai,இந்தியா
30 ஆக்,2026 - 13:57 Report Abuse
யாரோ ஒரு பாதிரியார் சொர்கதுலே இடம் ரிசர்வ் பண்ண காசு வாங்கலையோ? அதேமாதிரிதான். அது சரி அந்த இடத்தை போய் பார்க்க பஸ் சார்ஜ் எவ்வளவு? 0
0
Reply
Raghu - ,இந்தியா
30 ஆக்,2026 - 13:01 Report Abuse
100 வருசத்துக்கு முன்பு வரையான வில்லங்க சான்று தேவை 0
0
Reply
Chandhra Mouleeswaran MK - Tiruppur,இந்தியா
30 ஆக்,2026 - 12:38 Report Abuse
அட போங்கப்பா இது பேப்பர்ல ரெண்டு நாளைக்கி இடம் புடிக்கறதுக்கான சூப்பரு ஐடியா வருங்காலத் தம்பதி ஜோடி சேந்து திங்க் பண்ணி ஐடியா பண்ணி போஸ்ட் பண்ணி செட்டப் பண்ணி இருக்காங்க 0
0
Reply
Chandhra Mouleeswaran MK - Tiruppur,இந்தியா
30 ஆக்,2026 - 12:33 Report Abuse
இவன மாதிரி ஒரு ஒண்ணாம் நம்பர்ப் புண்ணாக்கான் உலகத்தில எங்கியுமே ஏன், பிரபஞ்சத்திலே எங்கியுமே இருக்க முடியாது இவனை வரும் செப்டம்பர் 17ம் தேதி "நிலவிற்கு" அனுப்பி வைத்து விடுவது மிகவும் நல்லது ஸ்பீடு போஸ்டில் அனுப்பினால் செலவு மிகவும் குறைவு என்று பேசிக் கொள்கிறார்கள் இங்கிருக்க விடடால் இன்னும் நாலு பேருக்கு இதேமாதிரி "நா - -ம் " சார்த்தி இவனே ஒரு காலத்தில் பெரிய "புர்ர்ர்ர்ர்ர்ர்ரோக்கன்" ஆகி விடுவான் 0
0
Venkatesan Srinivasan - Hosur,இந்தியா
30 ஆக்,2026 - 13:12Report Abuse
பழைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் - தற்போது சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் ஈரோடு மாவட்டங்களில் இத்தகைய புத்திசாலிகள் அதிகம்.
பெரும்பாலான மோசடி பொருளாதார வியாபாரங்கள், பணப்பரிமாற்றங்கள் மக்களின் போதிய விழிப்புணர்வு இல்லாமையாலும் பேராசையினாலும் உண்டாகிறது. 0
0
Reply
மேலும் 23 கருத்துக்கள்...
மேலும்
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
-
கிரைம் செய்திகள்: மேட்டுப்பாளையம்
Advertisement
Advertisement