இந்தியாவில் இருப்பது வரம்: பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி டாக்டர் வெளியிட்ட வீடியோ வைரல்
லண்டன்: இந்தியாவிலும், பிரிட்டனிலும் உள்ள மருத்துவ சேவையை ஒப்பிட்டு இந்திய வம்சாவளி டாக்டர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். கணவருக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இந்தியாவில் இருப்பது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தருணம் ஆக உணர்ந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தீபாஞ்சலி ஷர்மா இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்னர், டாக்டராக பணிபுரியும் எனது கணவருக்கு மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதலில் தலைவலி ஏற்பட்டது. பிறகு இரவு வாந்தி எடுத்தார்.
இதன் காரணமாக இரவு 10 மணிக்கு மருந்து வழங்க வேண்டிய நிலை உருவானது. இதனால் மருந்து மற்றும் மாத்திரை வாங்க வெளியே சென்று அழைந்தேன். அந்த தருணத்தில் தான் இந்தியாவில் இருப்பது எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டது என்பதை உணர்ந்தேன்.
தற்போது நான் பிரிட்டன் அல்லது மேற்கத்திய நாடுகள் என எங்கு இருந்தாலும் மருந்து வாங்க வரிசையில் நிற்க வேண்டும். அவசர கால துறைகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே இதில் விதிவிலக்கு. எனது கணவருக்கு உடனடியாக மருத்துவவசதி கிடைக்கவில்லை.
இந்தியாவில் இருந்து இருந்தால், இரவில் தன்னால் வீட்டை விட்டு வெளியேறி மருந்து வாங்கி, கணவரை கவனித்து கொள்ள முடியும். அதே நேரத்தில் இந்தியாவிலும் மருத்துவத்துறையில் நிறைய செய்ய வேண்டி உள்ளது. எந்த நாட்டிலும் 100க்கு 100 சிறந்த சேவை வழங்க முடியும் என்பதை எதிர்பார்க்கக்கூடாது.
இந்தியாவில் அனைவருக்கும் மருத்துவ சேவை என்பது எளிதாக கிடைக்கவில்லை எனக்கூறியுள்ள அந்த டாக்டர், வெளிநாடு செல்பவர்கள் கவனத்தில் ஒன்றை கொள்ள வேண்டும். நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். இந்தியாவில் தற்போது நமக்கு எளிதாக கிடைக்கும் பல விஷயங்களை பெற வெளிநாடுகளில் கடும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவித்து உள்ளார்.
இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரமும் மருந்துகள் உரிய விலையில் கிடைப்பதையும், மருத்துவ சேவையையும், டாக்டர்களை அணுக முடிவதையும் குறிப்பிட்டு நாட்டை புகழ்ந்து வருகின்றனர்.
சாணக்கியன் தொடங்கி, காந்தி, ஈவேரா என எல்லோரும் அவரவருக்கு ஒரு பிரச்சினை அகந்தைக்கு அடி விழுந்தவுடனேதான் சமுதாயத்தைக் குறித்த சிந்தனை உள்ளவர்களாக மாறுகிறார்கள். இவருக்கும் பிரச்சினை என வந்தவுடன்தான் இந்தியாவின் சிறப்பு புரிகிறதா கல்வி மருத்துவம் குடிநீர் இவை அடிப்படை விஷயங்கள் மத்திய மாநில அரசுகள் குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் இவை கிடைக்க முயற்சி எடுக்க வேண்டும் அடுத்து மதிப்புடன் அவரவர் தகுதிக்கேற்ப வருமானம் தரும் ஒரு வேலை உண்டி, உடை, உறையுள் இவைதான் பொதுவாக 70 முதல் 80 விழுக்காடு மக்கள் வேண்டுவது பொறியியற் கல்வி நிலையங்களை விட மருத்துவ கல்வி நிலையங்கள் மிக அவசியம் எல்லோரும் மருத்துவர் ஆக வேண்திய தேவையில்லை மருத்துவம் சார்ந்த பல படிப்புகள் இருக்கின்றன அவற்றையாவது இன்றைய இளைஞர்களுக்கு தர அரசு முயற்சி எடுக்க வேண்டும் அனைத்து அறநிலைய நிதி வசதிகளும் அரசால் இந்த முடயற்சிகளுக்குப் பயன்படுத்துவதில் மாற்றுக கருத்து இருக்க வாய்ப்பில்லை
ம் அப்பாயிண்ட்மென்ட் கிடைக்க போன் செய்து பார்த்ததில் ஒரே டாக்டர் 3 மாதம் கழித்து appointment கிடைக்கும் என்றார். இப்படி மற்றும் ஒரு முறை சோலிஹில், UKக்கு சென்ற2014 இல் பல்வலி அதிகமாயிற்று. அதுவும் சனிக்கிழமை. நல்ல வேலை பர்மிங்ஹாம் வடக்கில் ஒரு சர்தார்ஜி டாக்டர் மாலை 5:30 க்கு வரும் படி கூறினார். ரூட் கேனால் செய்ய்ய வேண்டும் என்றார் அன்று கிலேயனிங் செய்து விட்டு அடுத்த வாரம் பிள்லிக்கு வர சொன்னார் $250 அதற்கு கூலி. அதன் பின் நாங்கள் இருக்கும் பகுதியில் பாகிஸ்தானி டாக்டர் இருந்தார் அவரிடம் தான் ஒவ்வொரு முறையும் இங்கிலாந்து சென்றால் வைத்தியம் பார்ப்பது. என்னிடம் எப்போதும் பெயர் சொல்லி அழைப்பார். எனக்கு மட்டும் குறைத்து வாங்கி $50 கொள்வார். வெளியில் சந்தித்தால் நாங்கள் பேசிக்கொள்வோம் . என்க்கு அப்பாயின்மென்ட்டெல்லாம் கிடையாது . அப்படி அப்பாயின்மென்ட்டுக்கு உதவியாளரிடம் கேட்கும் போது ஏன் பெயரை சொல்வேன். நோ நோ நோ அப்பொயின்மென்ட் உடனே என்னை உள்ளே வர சொல்வார். என் போன் நம்பர் அட்ரஸ் எல்லாம் அவரிடம் இருப்பதால் என்னை அவருக்கு தெரியும் . ஏதாவது கொஞ்சம் சீரியஸ் என்றால் தற்சமயத்திற்கு மருந்து கொடுக்கிறேன் இந்தியா சென்று அங்கு வைத்தியம் பார்த்து கொள்ளுங்கள் என்பார். அங்கு டாக்டர் சீட் இல்லாமல் மருந்து வாங்க முடியாது. நான் இருந்த ஏரியா முற்றிலும் சுத்துவேன். முக்கால் வாசி இங்கீலாந்தை தனியாக சுத்தி வருவேன். ரயில் மற்றும் பஸ் டிராவல் அத்து படி. US இல் நானே கார் ட்ரைவிங்கும் செய்வேன். போலாகும் போனது international draiyving லைசன்சு எடுத்து செல்வேன். இங்க்கீலாந்தில் சார் விட மாட்டான் பஸ் சில தான் செல்வேன்.
ஆம் இந்தியா மக்கள் வசிக்க அருமையான நாடு ஆனால் அது அரசியல்வாதிகள் என்கிற கேடுகெட்ட ஈனத்தர சாக்கடை கழிச்சடைகள் இல்லாத வரை மட்டுமே
அரசியல்வாதிகள் நேர்மையாக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாக இருக்கவேண்டுமென்றால் புரிகிறது. ஆனால் அதற்காக அடிப்படை அமைப்பையே சிதைத்தால், ஒன்றும் மிஞ்சாது. இதைத்தான் முகவரியில்லாத கரப்பான் பூச்சிகள் செய்ய முயன்று கொண்டிருக்கின்றன
உண்மை. இந்தியா ஒரு அற்புதமான நாடு. இங்கு பிறந்து வசிக்க நாம் கொடுத்துவைத்திருக்கவேண்டும். உடனே அரசியல்வாதிகளின் வாழ்க்கையை மேற்கோள்காட்டி, இதனால் நாட்டில் வசிக்க பிடிக்கவில்லை என கருத்து எழுதவேண்டாம் ப்ளீஸ்.மேலும்
-
வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டம்
-
கராத்தே: 955 பேர் உற்சாகம்
-
எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கை அரசு பேருந்தை முறையாக இயக்க மனு
-
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார் நகலை சமர்ப்பிக்கணும்
-
மாகறலில் குழாய் உடைந்து தினமும் வீணாகும் குடிநீர்
-
வாலிபர் வெட்டி படுகொலை முன்விரோதத்தால் வெறிச்செயல்