ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் ஆராதனை உற்சவம்  

திருப்பூர்:திருப்பூர், பார்க் ரோடு, ராகவேந்திர சுவாமி கோவிலில், ஸ்ரீ குருராகவேந்திர சுவாமிகளின் 355-வது ஆராதனை மஹா உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி ஆகஸ்ட் 29 ல் சங்கல்பம், மஹா அபிஷேகம், பக்திப் பாடல்கள், பாதபூஜை, பல்லக்கு சேவை நடந்தன. ஆகஸ்ட் 30 ல் யாகசாலை பூஜை, நவகிரஹ ஹோமம், ராகவேந்திர ஹோமம், மஹா அபிஷேகம், ஆன்மிக சொற்பொழிவு, பல்லக்கு சேவை, ரத உற்சவம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 31 ல் மஹா அபிஷேகம், ஆன்மிக சொற்பொழிவு, பக்திப் பாடல்கள், கனகாபிஷேகம், பாதபூஜை நடைபெற உள்ளது.



Advertisement