தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

தேவதானப்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி ராம்பிரசாத் 27. வத்தலக்குண்டுவில் இயங்கும் தனியார் பைனான்ஸ் நிறுவத்தில் மக்கள் தொடர்பு மேலாளராக பணிபுரிகிறார். இவரை அலைபேசியில் தொடர்பு கொண்டஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த நபர், தனக்கு வீட்டு கடன் வேண்டும் என்றார். அந்த நபர் குறிப்பிட்ட புஷ்பராணி நகர் கல்குவாரி அருகே உள்ள தோட்டத்திற்கு ராம் பிரசாத் சென்றார்.

அங்கு மதுபோதையில் இருந்த மூன்று பேர் ராம்பிரசாத்தை தாக்கி அலைபேசியை பறித்து சென்றனர். காயமடைந்தவர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமபிரசாத் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement