பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம்

திருக்கோவிலுார்: அரசு நடுநிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

திருக்கோவிலுார் ஒன்றியம், பாடியந்தல் அரசு நடுநிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பெற்றோர் மத்தியில் நடந்தது. தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார்.

பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்தும், குழுவின் செயல்பாடுகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

ஆசிரியர்கள் சுகாசினி, திவ்யா, விஜயசாந்தி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். உதவி ஆசிரியர் கலா நன்றி கூறினார்.

Advertisement