கொளத்துார் தொகுதி தேர்தல் முடிவு; எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை கொளத்துார் தொகுதியில், த.வெ.க., - எம்.எல்.ஏ., பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி, தி.மு.க., வேட்பாளரும், அக்கட்சி தலைவருமான ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். முறைகேடுகள் நடந்துள்ளதால், இரண்டாம் இடத்தில் உள்ள என்னை வெற்றி பெற்றதாகவும் அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் வழக்கு இன்று (ஆகஸ்ட் 31) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வக்கீல் கபில் சிபல் வாதிடுகையில், '' தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால், இந்த வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு வழியில்லை'' என்றார்.
இதையடுத்து தேர்தல் கமிஷன் தரப்பில், ''எம்எல்ஏவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் இதே கோரிக்கையுடன் வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்பதால், இந்த வழக்கை ஏற்கக் கூடாது,” என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தனர்.
பிரத்யேக வீடியோ!
ஐகோர்ட்டில் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; அடுத்தது என்ன? என்பது குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
தீர்ப்புன்னு எதாவது வந்தாத்தான் அது நியூஸ்.
மொத்த தேர்தலும் செல்லாது. ஆகையால் முன்பிருந்த ஆட்சியே தொடரவேண்டும் என்று வழக்கு போடலாமே. வழக்கு நடத்த லட்சலட்சமாக வக்கீல் பீசு கொடுக்க காசுக்கென்ன குறைச்சலா.
ஸ்டாலினை முதல்வராக அறிவிக்க வழக்கு போடலாம்.
. கள்ள பணத்தை கரைக்க வழி டில்லி சலோ.
இலவு காத்த கிளி தான். வாழ் ஆள் டியும் வரை பெப்பே தான்.
தொட்டி கழுவதான் லாயக்கு.
தொட்டி கழுவதான் லாயக்கு. வடக்கண்ணு பிளிறி கொண்டிருந்து விட்டு அவர்கள் விடுவார்களா?
எதிர்த்து வெற்றிபெற்ற வேட்பாளர் திமுக வளர்ப்புதான். அதனால் முறைகேடு பண்ணிட்டார்ன்னு பேசுவது அர்த்தமில்லை. வினை விதைத்தவன் வினை அறுப்பான் .
ராதாபுரம் தொகுதி இன்பதுரை தோல்வியை 5 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கியதுபோல கொளத்தூர் கோமானுக்கும் நீதிமன்றம் 5 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கும்.
எனது அண்ணன் தளபதி பல கோடி வாங்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தீர்ப்பு வரும். காத்திருங்கள்
பேப்பே பேப்பேமேலும்
-
ஸ்ரீசத்ய சாய் சேவா – சாஸ்த்ரா பல்கலை நடத்தும் இலவச தொழிற் பயிற்சி
-
கடலுாரில் காங்., ஆர்ப்பாட்டம்
-
எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு இறுதி மெரிட் லிஸ்ட் வெளியீடு போலி சான்றிதழ் கொடுத்த மாணவர்கள் நீக்கம்
-
காஸ் ஏஜென்சிகள் நுாதன மோசடி சிலிண்டர் விநியோகத்தில் ‘தில்லாலங்கடி’
-
என்.எஸ்.எஸ்., முகாம் துவக்கம்
-
ரத்தினம் குளோபல் நிகர்நிலை பல்கலையில் ஒப்பந்தம்