பட்டா பெயர் மாற்றம் செய்ய 30 ஆயிரம் லஞ்சம்; வி.ஏ.ஓ., கைது
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே வீரசோழபுரத்தில் நிலத்தை உட்பிரிவு செய்து, பட்டா பெயர் மாற்றம் செய்து தர, ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. அருண்குமார், 34, கைது செய்யப்பட்டார்.
பொங்கலூரைச் சேர்ந்தவர் விவசாயி ராமசாமி, 76. இவருக்கு சொந்தமான நிலம், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே வீரசோழபுரத்தில் உள்ளது. அதை உட்பிரிவு செய்து, பட்டா
பெயர் மாற்றம் செய்ய விவசாயி ராமசாமி, வி.ஏ.ஓ. அருண்குமார் என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது பெயர் மாற்றம் செய்வதற்கு அருண்குமார் 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமசாமி, திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அவர்கள் ரசாயனம் தடவப்பட்ட 30,000 ரூபாயை கொடுத்து அனுப்பியுள்ளனர்.
அவர்கள் அறிவுறுத்தலின் பெயரில், ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை வி.ஏ.ஓ. அருண்குமாரிடம் விவசாயி வழங்கினார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் வி.ஏ.ஓ. அருண்குமார் என்பவரை கையும், களவுமாக கைது செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு வேட்டை ஒருபக்கம் நடை பெற்றாலும், மறுபக்கம் துணிந்து லஞ்சம் பெறுவதும் நடைபெறவே செய்கிறது. லஞ்சம் பெறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்காத வரை, லஞ்சம் பெறுவது தொடர் கதையாகவே இருக்கும்
excellent same way anti corruption cell should provide dummy notes are their own currency. it seems this currency will not return until court clears.
இதெல்லாம் மிகவும் குறைவு ஒரு மூன்று லட்சம் ரூபாயாவது கேட்டிருக்க வேண்டாமா
இவனுங்க திருந்தவே மாட்டானுங்க . இதுல இவனுகளுக்கு , இவனுங்க பொண்டாட்டிக்கு சாகும்வரை பென்சன் வேற.... மக்களே உஷாரா இருங்க ..... லஞ்சம் கேட்ட உடனே பிடிச்சு கொடுங்க .... திமுகா ஒழிந்து பிறகும் இந்த பயலுக திருத்தல . மக்களே தினமும் பத்து பயலுகளை பிடிக்கணும் ..... உண்மையான இந்தியன் லஞ்சம் கொடுக்க கூடாது . இப்பவாவது திருந்துங்கடா .... கோவையில் தான் லஞ்சம் அதிகம் .... அதுவும் வருவாய்த்துறை , ஆர்டிஓ , தொழிற்சாலை ஆய்வாளர்கள் , மாநகராட்சி ஊழியர்கள் ஆட்டம் பேயாட்டம் . தினமும் லஞ்சம் வாங்கும் ஒருவனுக்கு வேட்டு ......
இன்னும். 25. வருஷ. சர்வீஸ், நல்ல. சம்பள. பதவி. உயர்வுகள், இத்தனைக்கும். இருந்த. வாய்ப்பை. இப்படி. கரும்புள்ளி. குத்தி. பாழ். செய்துகொண்டுவிட்டாரே உழைத்து வரும். பணத்தில். வாழ. எண்ணாத. பேராசையின். பலன்
கவெர்மென்ட் சம்பளம் வாங்கிட்டு என் எப்படி பொதுமக்களின் பணத்தை சுரண்டுகிறீர்கள். நீங்கள் வாங்கும் இந்த லஞ்ச பணம் ஏற்கனவே பல வரி விதிப்பிற்கு பிறகு கிடைக்கும் கழிவு தான். அதையும் நீங்கள் பறிக்கிறீர்கள். பிச்சை கேக்கும் எச்சைகள்மேலும்
-
ஸ்ரீசத்ய சாய் சேவா – சாஸ்த்ரா பல்கலை நடத்தும் இலவச தொழிற் பயிற்சி
-
கடலுாரில் காங்., ஆர்ப்பாட்டம்
-
எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு இறுதி மெரிட் லிஸ்ட் வெளியீடு போலி சான்றிதழ் கொடுத்த மாணவர்கள் நீக்கம்
-
காஸ் ஏஜென்சிகள் நுாதன மோசடி சிலிண்டர் விநியோகத்தில் ‘தில்லாலங்கடி’
-
என்.எஸ்.எஸ்., முகாம் துவக்கம்
-
ரத்தினம் குளோபல் நிகர்நிலை பல்கலையில் ஒப்பந்தம்