மீன்வளத்துறையில் வாய்ப்புகள் மத்திய அமைச்சர் தகவல்

புதுச்சேரி: மீன்வளத்துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளதாக மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் சத்யபால் சிங் பாகேல் தெரிவித்தார்.

பா.ஜ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவர், பேசியதாவது:

புதுச்சேரியில் சுற்றுலா மற்றும் மீன்வளத்துறையில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. பிரதமரின் வழிகாட்டுதல்படி மீன்வளத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மீன்வளத்துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. புதுச்சேரி அரசியலில் மீனவ சமுகத்தின் ஓட்டுகள் மற்றும் பங்கு முக்கியமானது. கடந்த தேர்தல்களில் ஒப்பிடுகையில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது.

தற்போது 22 மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அல்லது என்.டி.ஏ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மக்களுடனான நேரடித் தொடர்பும், மக்கள் பணியுமே அரசியலில் வெற்றிக்கு மிக முக்கியமானது’ என்றார்.

Advertisement