சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை உள்பட 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

தாய்லாந்தில் இருந்து உயர் ரக கஞ்சா போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கேரள மாநிலம் கோழிக்கோடு, கண்ணூர், மலப்புறம், திரிசூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில், அபு தாஹிர், ஹரி கிருஷ்ணன், ஜெகத் மற்றும் ஜெய்சால் ஆகியோரின் வீடுகள் உள்பட 18 இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

இதேபோல, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 8 வெவ்வேறு வழக்குகளின் அடிப்படையில், தமிழகத்தில் சென்னை, ராமநாதபுரம் மற்றும் கர்நாடகா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களின் முக்கிய நகரங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement