நீரை சரியான முறையில் பயன்படுத்துவோம்: மேட்டூர் அணையை திறந்து வைத்து முதல்வர் விஜய் அறிக்கை
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு, முதல்வர் விஜய் நேற்று தண்ணீர் திறந்து வைத்தார். 'நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்; கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்' என முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. ஆண்டுதோறும் அணையின் நீர்மட்டம், 90 அடிக்கு மேல் இருக்கும் போது, பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இதன் மூலம், 13 டெல்டா மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கரில் குறுவை, தாளடி, சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்படும்.
கபினி அணை
அணை கட்டி, 93ம் ஆண்டு நடக்கும் நிலையில், இதுவரை குறித்தபடி ஜூன் 12ல், 20 முறை, முன்னதாக, 11 முறை, தாமதமாக, 61 முறை என, 92 ஆண்டுகள் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜூன் 12ல், அணையின் நீர்மட்டம், 79.56 அடியாக இருந்ததால், டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கவில்லை. கடந்த, ஆகஸ்ட் 1ல், கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்தது.
இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீரை, முதல்வர் விஜய் நேற்று காலை, 11:40 மணிக்கு திறந்து வைத்தார். முதற்கட்டமாக, வினாடிக்கு, 3,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து நீர் திறப்பு, 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
வெளியேற்றம்
நிகழ்வில், அமைச்சர்கள் ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன், நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் மு.வடநெரே, முதன்மை பொறியாளர் கோபால கிருஷ்ணன், சேலம் கலெக்டர் இளம் பகவத், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஜெயகுமாரி, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், சிவகுமார், பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தையடுத்து, முதல்வர் சார்பில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
மேட்டூர் அணை நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பாசன தேவைக்கு ஏற்ப, நீர் வெளியேற்றம் படிப்படியாக முறைப் படுத்தப்படும்.
இது தொடர்பாக, வேளாண்மை, நீர்வளம், வருவாய் துறைகள், மாவட்ட நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேட் டூர் அணையில் இருந்து திறக்கப்படும் ஒவ்வொரு கனஅடி நீரும், விவசாயிகளின் நலனுக்காக, முறையாக பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.
காவிரி ஆறு மற்றும் கால்வாய்களின் வழித்தடங்களில், சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் வாயிலாக, தண்ணீர் உறிஞ்சுதல், அனுமதியின்றி நீர் எடுத்தல், அனுமதிக்கப்பட்ட நீரேற்று திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக நீர் எடுப்பது போன்றவை கண்டிப்பாக தடுக்கப்படும்.










இதற்காக, நீர்வளம், வருவாய், காவல், மின்சார துறை அலுவலர்களை கொண்ட கூட்டு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, இரவு - பகலாக ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும்.
தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை மற்றும் தீவிர எல் நினோ தாக்கத்தை கருத்தில் வைத்து, தற்போது நீர் திறப்பது, வரையறுக்கப்பட்ட நீரை சிக்கனமாகவும், திறம்படவும் நிர்வகித்து, சம்பா சாகுபடியை பாதுகாப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கையாகும். எனவே, விவசாயிகள் குறைந்த நீர் தேவையுள்ள, மத்திய கால நெல் ரகங்களையும், நேரடி நெல் விதைப்பு உள்ளிட்ட நீர் சிக்கன சாகுபடி முறைகளையும் பின்பற்ற வேண்டும். நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்; கடைமடை வரை பகிர்ந்தளிப்போம். சம்பா சாகுபடியை வெற்றி பெறச் செய்வோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
@block_B@ முதல்வரை கொஞ்சிய மூதாட்டி
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தப் பின், முதல்வர் விஜய், சேலம் விமான நிலையத்துக்கு புறப்பட்டார். மதியம், 2:00 மணிக்கு, மேட்டூர் அனல் மின் நிலையம் சின்னகாவூர் அருகே விஜய் சென்ற போது, சாலையோரம் விவசாயி ராமசாமி, 60, அவரது மனைவி பழனியம்மாள், 52, ராமசாமியின் சகோதரி செல்லம், 73, ஆகியோர், விவசாய வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது வாகனத்தை நிறுத்தி இறங்கிய முதல்வர் விஜய், ராமசாமி வீட்டுக்கு சென்றார். அவரை, ராமசாமி குடும்பத்தினர் ஆர்வமாக வரவேற்று, வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு விவசாய பணி குறித்து, செல்லத்திடம் விஜய் கேட்டறிந்தார். அப்போது, விஜய் கன்னத்தில் இரு கைகளையும் கொண்டு சென்று, செல்லம் கொஞ்சினார்.
தொடர்ந்து மூதாட்டிக்கு, விஜய் கண்ணாடி வழங்கினார். ராமசாமி குடும்ப உறுப்பினர்களுக்கு, வேட்டி, பட்டு சேலைகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்துவிட்டு விஜய் புறப்பட்டார். அதேபோல, மேச்சேரி திமிரிக்கோட்டையில் சாலையோரம் நின்றிருந்த, மூன்று மூதாட்டிகளிடம் நலம் விசாரித்தார்.block_B
@block_B@ முதல் முறை
மேட்டூர் அணை டெல்டா பாசன நீரை, 2018 ஜூலை 19; 2019 ஆக., 13; 2020 ஜூன் 12 என, மூன்று முறை, அப்போதைய முதல்வர் பழனிசாமி திறந்தார். பின், 2021 ஜூன் 12; 2022 மே 24; 2023 ஜூன் 12; 2025 ஜூன் 12 என, நான்கு முறை, அப்போதைய முதல்வர் ஸ்டாலின் திறந்தார். தற்போது, த.வெ.க., ஆட்சியில் முதல்வர் விஜய், முதல் முறையாக பாசன நீரை, நேற்று திறந்து வைத்து உள்ளார். தொடர்ந்து மேட்டூர் அணை கசிவுநீர் சுரங்கம், அணை அடிவாரத்தில் உள்ள, 50 மெகாவாட் நீர் மின் உற்பத்தி நிலையம், 200 மெகாவாட் சுரங்க மின் உற்பத்தி நிலையத்தையும் பார்வையிட்டார்.block_B
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை சொல்லும் முதல்வருக்கு மக்களின் வரிப் பணத்தை சிக்கனப் படுத்தி ஆக்கபூர்வமான பணிகளுக்கு உபயோகப்படுத்தியிருக்கலாம் என்று யார் அறிவுரை சொல்வது? அணை திறக்க 6 கோடிக்கு மேல் செலவு செய்ததற்கு பதிலாக ஒரு ஏழை விவசாயியை வைத்து திறக்க வைத்திருந்தால் முதல்வரின் மதிப்பு மக்கள் மத்தியில் வான் அளவு உயர்ந்திருக்கும்.
ஏற்கனவே ஜூன் 12ல் அணை திறக்காமல்... பயிர் காய்ச்சு அழிந்தது பாதி... பெருமழை பெய்து அழிந்தது மீதி... காலம் தவறிய அணை திறப்பு... விவசாயிக்கும் பயன்படாது.. ஊருக்கும் பயன்படாது... அக்டோபரில் வடகிழக்கு பருவமழை அடித்து நொறுக்கப் போகிறது... இப்ப போய் அணையை திறப்பது... கிழவி வயசுக்கு வந்தா என்ன... வராட்டி என்ன...? கருநாடகத்திடம் சண்டை போட்டு காலத்தில் நீர் பெற்றுத்தர யோக்கியதை இல்லாமல்... இதுல வேற இவர் நீரை சரியா பயன்படுத்த அறிவுரை வழங்குகிறார்... யார் யாருக்கு அறிவுரை வழங்குவது...
அரசியல் காழ்ப்புணர்ச்சியை சற்று ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் திமுக கொறடாவே பாராட்டுமளவிற்கு விஜய் ஆட்சி நடக்கிறது. பாராட்டலாம். சிற்சில நேரங்களில் திமுக போல, அரசியலுக்காக, மட்டமாகவும் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பாஜக போல சாணக்கியத்தனமாகவும் நடக்க வேண்டியிருக்கிறது. சகித்துக் கொள்ளலாம். இவராவது கேரளா ஆந்திர கர்நாடக மாநிலங்களுடன் நட்பாக இருந்து உபரி நீரைப் பெற்று தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றட்டும் மழை பொழிந்து பெறும் நீர் வீணே கடலில் கலக்காமல் ஆங்காங்கே தேக்கி வைக்க வழி செய்யட்டும். அண்மையில் ரெயிலில் திருச்சி செல்லும் வழியில் ஒரு விவசாயி தனது நிலத்தின் ஒரு புறம் பெரிய பள்ளம் வெட்டி, அதில் நெகிழி உறையிட்டு நீரைத் தேக்கி வைத்து அவரது நிலத்திற்கு பயன்படுத்தியதைக் காண நேர்ந்தது. அத்தகு முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அகில இந்திய அளவில் நதி நீர் இணைப்புத் திட்டம் நிறைவேற மத்திய அரசுடன் ஒத்துழைக்கட்டும்
நீங்கள் அரசியல் நடுநிலைமையாளரா?
எஸ்பிஆர்... ரொம்ப பொங்காத...? ஓவர் சொம்பு அடிக்காத...? நீ யார்னா... இன்றைய ஜென்சிகிட்ஸ் மாதிரி... அப்பன் உழைச்சு சம்பாதிச்ச காசுல... 1.5 லட்சம் மொபைல் போன் வச்சிகிட்டு... அப்பன் சம்பாதித்த காசுல மாலுக்கு பிகரை ஒட்டிகிட்டு... போய் கடலை போடுற கும்பலச் சேர்ந்தவன் நீ...ன்னு நினைக்கிறேன்... 'ஒத்த காசு உழைச்சு சம்பாரிக்க துப்பில்லாம... அடுத்தவன் காசுல மஞ்சள் குளிக்குற ஆளு'... “நாளொரு கொலையும், பொழுதொரு குழந்தை, பெண்கள் வன்புணர்வு கொடுமையும் என விஜய் ஆட்சி நல்லாத்தான் நடக்குது... போயா போக்கத்தவனே... அவனவன் காரி துப்பிட்டிருக்கான்... ஆமா... நீயும் அந்த “நாளை பிரதமர், ஜனாதிபதி”...ன்னு கூவுற அறிவில்லாத தற்குறி கூட்டத்தில் ஒருவனா...?
பதிலடி அபாரம் நன்பரே
இனி spr கருத்து போடும் முன்பு யோசிக்க ஆரம்பித்து விடு.
விவசாயிகளுக்கு புத்திமதி சொல்றாராம்...
ஒன்றும் தெரியாத நடிகனுக்கு ஒட்டு போட்ட தமிழக மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னவும் வரும்.
சிக்கனம் மக்களுக்குதான் தேவை.ஆள்பவர்களுக்கு தேவையில்லை. ஐந்து நிமிட நிகழ்ச்சிக்கு தனி விமானத்தில் பறப்போம். ஐந்து கோடிக்கு மேல் செலவு செய்வோம்.இந்த ஆடம்பர மெல்லாம் சிக்கன லிஸ்டில் வராது.
மக்களின் குடிநீர் தேவைக்காக கடல் நீர் சுத்தரிக்கப்படுகிறது. இதன்மூலம், ஒரு லிட்டர் கடல் நீரை சுத்திகரிக்க 7 ரூபாய் வரை செலவாகிறதாம்....மழை தண்ணீரை கடலில் விட்டு விட்டு பிறகு மீண்டும் கடல் நீர் சுத்திகரிப்பாம் ..தமிழகத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 957 நீர் நிலைகள் உள்ளன. 50,197 நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை. ஜல்சக்தித்துறை அமைச்சர் அளித்த புள்ளி விவரம் இது என்று செய்தி ..நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் நீர் வரத்து குறைந்து தண்ணீர் பஞ்சம் ...இதற்கு மிக முக்கிய காரணம் வரை முறை இல்லாத ஆற்றுமணல் கொள்ளை ..மணல் கொள்ளையால் பாலாறு மொத்தமாக காணாமல் போனது ...மனித வரலாற்றில் இதுவரை காணாத மணல் கொள்ளை .....ஆறு ஏரி குளம் குட்டை கால்வாய் என்று அனைத்தும் கொள்ளை ....படித்து முன்னேறிய மாநிலம் .
கண்ணுக்கு தெரியாமல் பூமிக்கு அடியில் ஒளிந்திருக்கும் நிலத்தடி நீரே மனித குலத்தின் மிகப்பெரிய சேமிப்பு கிடங்காகும். ஆனால் அண்மைக்காலமாக , மிதமிஞ்சிய பயன்பாடு காரணமாக தமிழ்நாட்டின் நிலைத்தடி நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவை சந்தித்து வருவதாக மத்திய நீர்வளத்துறையின் ஆய்வறிக்கை.500 முதல் 1,000 அடி ஆழத்தில் எடுக்கப்படும் நிலத்தடி நீர் மனிதர்களுக்கும், விவசாயத்திற்கும் ஏற்றதல்ல என்று செய்தி ..... இங்கே 1000 அடி 2000 அடி என்று பாதாளம் வரை சென்று நீர் borewell போட்டு நீர் சுரண்டுகிறார்கள்...
மித மிஞ்சிய பயன்பாடு காரணமாக தமிழ்நாட்டின் நிலைத்தடி நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவை சந்தித்து வருவதாக மத்திய நீர்வளத்துறையின் ஆய்வறிக்கை. அதில் சென்னை, திண்டுக்கல், கரூர், மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 10 மாவட்டங்கள் நிலத்தடி நீரை அதிகம் Over-exploited பயன்படுத்துவதில் சிவப்புப் பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....இங்கே 1000 அடி 2000 அடி என்று பாதாளம் வரை சென்று நீர் borewell போட்டு நீர் சுரண்டு கிறார்கள்.... இந்த நீர் மனிதர்கள் குடிக்க ஏற்றதா ??... தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நைட்ரேட் மற்றும் புளோரைடு அளவு அனுமதிக்கப்பட்ட அளவைவிட நீரில் அதிகமாக இருப்பது கண்டறியப்ட்டிருக்கிறது என்று மத்திய நிலத்தடி நீர் வாரியம் தெரிவித்திருக்கிறது.
உபரி நீர் கடலில் கலந்து வீணாக்காமல் இருக்க வழி வகை செய்யவேண்டும்.
அதற்கு கல்லனையை.... பகுதிகளில் தூர் எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கல்லனையை அடுத்து சிறு ....சிறு....அணைகளை கட்டி நீர் தேக்கம் செய்துக்கொள்ள வழி வகை செய்யவேண்டும்....
மொத்தத்தில் இது நமக்கு விவசாயம் செய்ய குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக்கொள்ள உதவிடும்.....
முதல்வரின் அறிவுரை நிச்சயம் மக்கள் பின்பற்ற வேண்டும் சரி. தண்ணீரை அவ்வாறு சிக்கனமாக செலவழித்து சேமிக்க அரசின் வசம் என்ன வழி இருக்கிறது. 40 ஆண்டுகளாக கொள்ளை அடித்த இரு திராவிட கூட்டம் காவிரி நீரை சேமிக்க எந்த முயற்சியையும் செய்யவில்லை. முதல்வர் விஜய் இதற்கு முன்னுரிமை கொடுத்து ஏதாவது செய்ய வேண்டும். நீங்கள் விவசாயிகள பயன்பாட்டுக்கு, மற்றும் குடிநீருக்கு திறந்து வைத்த தண்ணீர் வெறும் 50 சதவீதம் மட்டுமே. மீதி கடலில் தான் கலக்கிறது. தற்போது விஜய் ஆட்சியில் தான் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி மாட்டி கொள்கிறார்கள் எடப்பாடி கூசாமல் பொய் சொல்வது போல் தற்போது வீணாகும் தண்ணீருக்கு காரணம் விஜய் என்று கூட வாய் கூசாமல் சொல்வார். அதனால் அடுத்த ஆண்டுக்குள் அரசு ஏதாவது செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.மேலும்
-
டில்லியை நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு; லக்னோவில் அவசர தரையிறக்கம்
-
மத்திய அரசு குறித்து சர்ச்சை கருத்து; ஓய்வுபெற்ற அதிகாரியிடம் 8 மணிநேரம் விசாரணை
-
வெள்ளம் பாதித்த வாரணாசி; மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விட்ட பிரதமர் மோடி
-
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்; பஞ்சாப் ஆம்ஆத்மி அரசு மீது பாஜ எம்பி ராகவ் சத்தா குற்றச்சாட்டு
-
ஐகோர்ட்டில் தமிழை அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தனித் தீர்மானம்; சட்டசபையில் நிறைவேறியது
-
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு