உணவுத்துறை அதிகாரிகள் 2 கடைக்கு ரூ.50,000 அபராதம்

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையத்தில் குட்கா விற்பனை செய்த, இரண்டு கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
பள்ளிப்பாளையத்தில் புதுப்பாளையம், அக்ரஹாரம், காவிரி, வசந்த நகர், ஆவத்திபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கடை, பேக்கரி, டீ கடையில் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை பள்ளிப்
பாளையம் வட்டாரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரங்கநாதன் மற்றும் அதிகாரிகள், போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, புதுப்பாளையம், அக்ரஹாரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் என, இரண்டு கடைகளில், 20 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, இரண்டு கடைகளுக்கும், தலா, 25,000 ரூபாய் வீதம், 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement