டூவீலர்கள் மோதி விவசாயி பலி

எருமப்பட்டி:திருச்சி மாவட்டம், பச்சபெருமாள்பட்டி அருகே, அரப்பூலிப்பட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 63; விவசாயி. இவர் கடந்த, 25ல், எருமப்பட்டியில் இருந்து அரப்பூலிப்பட்டிக்கு டூவீலரில் சென்றுகொண்டிருந்தார்.

பவித்திரம் புதுார் அருகே எதிரே வந்த டூவீலர், இவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணனை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement