நியூயார்க் வங்கி பெண் உயரதிகாரி குத்திக்கொலை; கொலையாளியை சுட்டுக்கொன்ற போலீசார்

1

வாஷிங்டன்: நியூயார்க்கில் வங்கி பெண் உயரதிகாரி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில், 'பேங்க் ஆப் அமெரிக்கா'வின் துணைத் தலைவரும், ஐவி லீக் பட்டதாரியுமான எரின் பியாசென்டி கொல்லப்பட்டார். பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் போர்தாம் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்ற இவர், மகப்பேறு விடுப்பு முடிந்து அண்மையில் தான் வேலைக்குத் திரும்பியுள்ளார்.

வங்கி அதிகாரியை கத்தியால் குத்திக் கொன்றவர் பமீலா சிஸ்னெரோஸ்,49, என்பது தெரிய வந்தது. தான் வைத்திருந்த ஷாப்பிங் பையில் இருந்த இரு கத்திகளை எடுத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், 68 வயது முதியவர் ஒருவரும் காயமடைந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கொலையாளி சிஸ்னெரோஸை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வந்த இவர் மீது எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement