2029ல் பிரதமர் வேட்பாளர் தலைவர் முதல்வர் விஜய்தான்; தவெக எம்எல்ஏ., கனிமொழி

64


கோவை: ''வரும் 2029ல் பிரதமர் வேட்பாளர் தலைவர் முதல்வர் விஜய்தான்,'' என தவெக எம்எல்ஏ., கனிமொழி தெரிவித்துள்ளார்.

அவரது பேட்டி: 2029 பிரதமர் வேட்பாளர் தலைவர் முதல்வர் விஜய்தான். கடந்த 2, 3 நாட்களாக பயங்கரமாக போய் கொண்டு இருக்கிறது. 2025ல் இது மாதிரியான ஒரு நிகழ்வு தான் ஆனது. இது மாதிரி தான் என்கிட்ட கேட்டார்கள். 2026 என்ன நடந்ததுனு இந்த நாடே பார்த்து இருக்கும்.

2029ல் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதமர் யாருனு முடிவு பண்ண போறது டில்லியில் இருந்து கிடையாது. அது தமிழகத்தில் இருந்து தான் முடிவு பண்ணி வர போறாங்க. அதிர்ச்சியான இந்திய அரசியல் 2029ல் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறதா, வெளியே போகிறதா என்பதை நீங்கள் 2026ல் பார்ப்பீங்க, விஜயை முதல்வர் இருக்கையில் உட்கார வைத்தது ராகுல் தான்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் தான் அவரை கையைப்பிடித்து அழைத்துச் சென்று நாற்காலியில் உட்கார வைப்பார். 2025ல் கணித்தது 2026ல் நடந்து இருக்கிறது. 2029ல் இது ஆணித்தரமாக நடக்கும், கண்டிப்பாக நடக்கும். இவ்வாறு தவெக எம்எல்ஏ., கனிமொழி கூறினார்.

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை என்றால் பதவி விலகுவோம் என்று காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். அது சர்ச்சையான நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், முதல்வர் விஜயை சந்தித்து சமாதானம் செய்திருந்தார்.

இந்நிலையில், தவெக எம்எல்ஏ., கனிமொழி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இதனால் வரும் நாட்களில் தவெகவினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்குமான வார்த்தைப் போர் மீண்டும் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

தவெக எம்எல்ஏ கனிமொழி செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement