ராமர் கோவில் அறக்கட்டளைக்கு மூன்று உறுப்பினர்கள் நியமனம்
அயோத்தி : அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளைக்கு புதிதாக மூன்று உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்களின் காணிக்கைகளில் முறைகேடு என எழுந்த புகார்களை தொடர்ந்து, 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.அதில் உண்டியல் காணிக்கை எண்ணும் மையத்தில் இருந்த தற்காலிக ஊழியர்கள், முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.அதே நேரத்தில் இனி முறைகேடுகள் நடக்காமல் இருக்க, புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், ராமர் கோவில் அறக்கட்டளைக்கு புதிதாக மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அயோத்தியை சேர்ந்த மதன் மோகன் பாண்டே, டில்லியை சேர்ந்த மகேஷ் பக்சந்தா மற்றும் உபியின் ஷிகோஹாபாத்தை சேர்ந்த நிர்மல் யாதவ் ஆகியோர் அறக்கட்டளை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் யார் தலைமை ஏற்பார்கள் என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
மேலும்
-
சலுகைகள் ரத்து? பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு...: மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
-
இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
-
9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...
-
பி.சி.சி.ஐ., புதிய முடிவு
-
மயங்கி விழுந்த எகிப்து வீராங்கனை