ஆட்டோ டிரைவர் தற்கொலை

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே ஆட்டோ டிரைவர துாக்கிட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ஐயப்பன், 30; இவரது மனைவி சசிகலா. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார்.

தம்பதிக்கிடையே கருத்து வேறுபாட்டால் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரிந்து வசிக்கின்றனர்.

இதனிடையே ஐயப்பன் சிங்கப்பூரில் கூலி வேலை செய்துவிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தவர் எலவனாசூர்கோட்டையில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார்.

இந்நிலையில் ஐயப்பன் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் அவரது வீட்டில் துாக்கிட்டு இறந்தார்.

எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement