பஸ் மோதி மூதாட்டி பலி

பெரியமேடு: சாலையை கடக்க முயன்ற மூதாட்டி சாவித்திரி, 70, பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரியமேடு பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி, 70. இவர், சூளை ரவுண்டானா அருகே நடைபாதையில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.

சூளை ரவுண்டானா அருகே, நேற்று முன்தினம் இரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது, பிராட்வேயில் இருந்து செங்குன்றம் செல்லும் தடம் எண்: 242 பேருந்து, அவர் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.



Advertisement