எல்லையில் இந்திய விமானப்படை பயிற்சி; பீதியில் பாகிஸ்தான்
புதுடில்லி: எல்லையில் இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பீதியடைந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகே, இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் பாகிஸ்தானுக்கு அச்சத்தை கொடுத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், முன்னெப்போதும் இல்லாத வகையில் எல்லையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், வரும் செப்டம்பர் 21ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி வரை சுமார் 17 நாட்கள் ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதற்காக, நோட்டம் அறிவிப்பை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.
ஜெய்சால்மர்-பார்மர்-பலோடி-ஜோத்பூர் செக்டார் மற்றும் நல்-பிகானீர் பகுதிகளை உள்ளடக்கிய வான்வெளியில் சுமார் 40,000 அடி உயரம் வரை இந்திய விமானப்படை வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்தப் பகுதி, சர்வதேச எல்லையிலிருந்து சுமார் 20 கி.மீ., தொலைவிற்கு அருகில் உள்ளது.
இந்திய விமானப்படையின் இந்த அறிவிப்பு, பாகிஸ்தானுக்கு பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும், பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளது.
நமது வளர்ச்சி ஒன்று போதும் அவர்கள் அவர்களாகவே வீழ்த்துவிடுவார்கள்.
ஆபரேஷன் சித்தூர் போது துருக்கி மற்றும் சீனா நேரடியாக ஆயுதம் சப்ளை செய்தது. சில நாடுகள் மறைமுகமாக உதவின. அதன் விளைவாக இந்தியா எந்நேரத்திலும் எதுவும் செய்யும் என்கிற பயத்தில் அடியாட்கள் சேர்ப்பதை போல் மூன்று நாடுகள் மெக்கா ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் சிறு பிள்ளையான பங்களாதேஷ் பாகிஸ்தானுக்கு ஜால்ரா அடித்தததன் காரணமாக பங்களாதேஷ்க்கு பயம். ஆக இவங்களும் கூட்டணியில் சேர விரும்புகிறார்கள்.
அப்படியே மொத்த POK ல இருக்குற பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாமை குண்டு போட்டு காலிசெய்தால் தான் பயன்மேலும்
-
அகழாய்வு பணிகள் மாணவிகள் ஆய்வு
-
டூவீலர் திருட்டு
-
ராமநாதபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
-
நடுச்சத்திரம் காசி விஸ்வநாதர் கோயில் புணரமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தம் பக்தர்கள் வேதனை
-
அரசு மருத்துவமனைக்கு அவசர தேவை ஜெனரேட்டர் வசதியே மாநகராட்சிக்கு கோரிக்கை
-
போடி மெயின் ரோட்டில் சென்டர் மீடியன் தேவை