காங்., கமிட்டி பயிற்சி துறைக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்
புதுச்சேரி: புதுச்சேரி பிரதேச காங்., கமிட்டியின் பயிற்சித் துறைக்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, அகில இந்திய காங்., கமிட்டி பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி பிரதேச காங்., கமிட்டியின் பயிற்சித் துறைக்கான புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு, காங்., தலைவர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, புதுச்சேரி பிரதேச காங்., கமிட்டியின் பயிற்சி துறைக்கான தலைவராக ஈரம் ராஜேந்திரன், உறுப்பினர்களாக விநாயகமூர்த்தி, சம்பத், கோர்க்காடு அசோக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். புதிய நிர்வாகிகள், புதுச்சேரி பிரதேச காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.,யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரேஷனில் விற்று தீர்ந்தது வெங்காயம்: கூடுதலாக 1,000 டன் கேட்கும் தமிழகம்
-
வாலிபரை கொல்ல முயன்றவர்களை கைது செய்யாதது ஏன்? போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி
-
ஜெயப்பிரியா வித்யாலயா கல்வி குழுமத்தில் ஆசிரியர் தின விழா
-
முத்தாலம்மாள் கல்லுாரியில் ஆசிரியர் தினம்
-
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஊர்வலம்
-
பெயருடன் பிறப்பு சான்று பெற கால அவகாசம்
Advertisement
Advertisement