போதை மாத்திரை பறிமுதல் விற்க முயன்றவர் கைது

சேலம்:சேலம், கிச்சிப்பாளையம் போலீசார் எருமாபாளையத்தில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக, 'போதை'யில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது, சோளம்பள்ளத்தை சேர்ந்த விக்னேஷ், 20, என்பதும், வலி நிவாரணி மாத்திரைகளை, சிரஞ்ச் மூலம் நரம்பில் போட்டுக்கொண்டதும் தெரிந்தது.

மேலும் அவரிடம் சோதனை நடத்தியதில், 60 போதை மாத்திரைகளை விற்க வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

Advertisement