தென்னை மரம் விழுந்து காயமடைந்த வியாபாரி பலி

விழுப்புரம்: தென்னை மரம் விழுந்ததில் படுகாயமடைந்த மரம் வியாபாரி மருத்துவமனையில் இறந்தார்.

விழுப்புரம் அடுத்த ராமையன்பாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 60; மரம் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் நல்லரசன்பேட்டையில் தென்னை மரம் வெட்டியபோது, பெருமாள் மீது மரம் விழுந்தது.

இதில் படுகாயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.

வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement