ஆயுதப்படையில் காவலர் நாள்

விழுப்புரம்: விழுப்புரம் ஆயுதப்படை வளாகத்தில், தமிழக காவலர் நாள் கடைபிடிக்கப்பட்டது.

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அருளரசு தலைமை தாங்கினார். எஸ்.பி., மதிவாணன், ஆயுதப்படை டி.எஸ்.பி., ஞானவேல் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவு துாணுக்கு டி.ஐ.ஜி., – எஸ்.பி., மற்றும் போலீசார் மரியாதை செலுத்தினர்.

அப்போது, காவல்துறையினரின் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தைப் போற்றுவதுடன், காவல்துறையின் உன்னத நோக்கங்களை நிலைநிறுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற உறுதிமொழி ஏற்றனர்.

Advertisement