தார்சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

வேப்பூர்: சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேப்பூர் அடுத்த பெரியநெசலுார் கிராமத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, சேலம்–விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வடக்கு நோக்கி கிராமத்திற்குள் செல்லும், 2 கி.மீ., துார தார்சாலை உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக முன் தார்சாலை போடப்பட்டதை தொடர்ந்து, பராமரிப்பு பணிகள் செய்யாததால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைவதுடன், இரவு நேரங்களில் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

எனவே, பெரியநெசலுாரில் சேதமடைந்த தார்சாலையை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement