தென்னிந்தியாவில் காங்., அழியும் யு.சி.பி.ஐ., தகவல்
மதுரை, செப். 7 –
‘‘தென்னிந்தியாவில் காங்., அழியும்,’’ என, மதுரையில் இந்திய ஐக்கிய கம்யூ., (யு.சி.பி.ஐ.,) மாநில செயலாளர் பாஸ்கரன் கூறினார்.
அவர் கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.,வின் நிழலான த.வெ.க.,வுடன் காங்., வி.சி.க.,வினர் கூட்டணி சேர்ந்து தி.மு.க., முதுகில் குத்தி விட்டனர். முதல்வர் விஜய் ‘பிரதமர் வேட்பாளர்’ என்பதை காங்., ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. அச்சூழலில் த.வெ.க.,விலிருந்து வெளியேறும் காங்கிரஸ், தி.மு.க., கூட்டணியாலும் புறக்கணிக்கப்படும். இதனால் தென்னிந்தியாவில் காங்., அழியும். இண்டி கூட்டணியை அதன் தலைவர் ராகுலே அழித்து விட்டார். சட்டசபையில் அமைச்சர்கள் பேசுவதை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவது அவர்களின் அனுபவமின்மையை காட்டுகிறது என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement