கம்பன் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2002–2003ம் கல்வியாண்டில் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

விழாவில், அந்த கல்வியாண்டில் கற்பித்த தமிழாசிரியர் முருகேசன், ஆங்கில ஆசிரியர்கள் நந்தகுமார், ஜெயந்தி, கணித ஆசிரியர் குமாரசாமி, அறிவியல் ஆசிரியர் ஆண்டாள், சமூக அறிவியல் ஆசிரியர் சமணகிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

நிகழ்ச்சி முன்னாள் மாணவர்களின் பழயை நினைவுகளை நினைவு கூறும் வகையில் அமைந்தது. 24 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கற்பித்த ஆசிரியர்கள், மாணவர்கள் சந்தித்து பேசினர். தொடர்ந்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளிக்கு ஒலிபெருக்கி வழங்கப்பட்டது.

Advertisement