உலாவரும் கரடிகள் அச்சத்தில் மக்கள்

திருநெல்வேலி: பாபநாசம் அருகே முதலியார்பட்டி பகுதியில் ஒரே நேரத்தில் 3 கரடிகள் சுற்றித்திரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வனப்பகுதியை ஒட்டியுள்ள அனவன் குடியிருப்பு, வடமலைசமுத்திரம், முதலியார்பட்டி உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில் இரவு நேரங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் கரடித்தாக்குதலில் தோட்ட காவலாளி முருகன் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து கரடி - - மனித மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முதலியார்பட்டி பகுதியில் 3 கரடிகள் கூட்டமாக சுற்றித்திரிந்த காட்சிகள் சி.சி.டி.வி.,யில் பதிவாகியிருந்தது.

இதனால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், அவற்றை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.

Advertisement