உலக பிசியோதெரபி தின விழா
புதுச்சேரி: உலக பிசியோதெரபி தினத்தையொட்டி, புதுச்சேரி லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லுாரி மற்றும் பிசியோதெரபி கல்லுாரி சார்பில் மருத்துவ முகாம், புதுச்சேரி கடற்கரை, காந்தி சிலை அருகில் நடந்தது.
கல்லுாரி நிறுவனர் ஜெகத்ரட்சகன் எம்.பி., பாரத் கல்வி குழும தலைவர் சந்திப் ஆனந்த், நிர்வாக இயக்குனர் ஸ்வேதா சந்திப் ஆனந்த் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடந்த முகாமிற்கு, மருத்துவக் கல்லுாரி முதல்வர் ஜெயலட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் ஆசையாஸ் போஸ்கோ, நிர்வாக இயக்குனர் அன்பு, பிஸியோதெரபி கல்லுாரி முதல்வர் வேல்முருகன் ஆகியோரின் முன்னிலையில் முகாம் நடைபெற்றது.
முகாமில் பொது மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், இயன் முறை மருத்துவம் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. உடற்பயிற்சி ஆலோசனையுடன் முக்கியத்துவமும் இயன்முறை மருத்துவர்களால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது. ரத்தஅழுத்தம் , நீரிழிவு நோய் பரிசோதனை , ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பயனடைந்தனர்.
மேலும்
-
கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்
-
சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு
-
பாலம் அமைக்கும் பணிகள் தாமதம் மக்கள், மாணவர்கள் தவிப்பு
-
பள்ளியில் ஆசிரியர் தின விழா பரிசு வழங்கிய மாணவர்கள்
-
விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள் கவனமாக இருக்கணும்! முக்கிய 'ஸ்பாட்'களில் போலீசார் ஆய்வு
-
மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அடைப்பை நீக்க பணியாளர்கள் அச்சம் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்