பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று மாலையில் பெருமாள் சேஷ வாகனத்தில் கிருஷ்ண அவதாரத்தில் எழுந்தருளினார். தீப ஆராதனைகள் நிறைவடைந்து இரவு 8:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப் பட்டார்.
தொடர்ந்து கோயில் முன்பு உறி அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ரத வீதிகளில் பெருமாள் வலம் வந்தார்.
காளிதாஸ் பள்ளிக்கூட தெருவில் பால், தயிர், வெண்ணை மற்றும் தேங்காய் கட்டி கிருஷ்ணர் வேடமிட்டவர் உறி அடித்தார்.
பின்னர் அனைத்து பகுதிகளிலும் 'கோவிந்தா' கோஷத்துடன் பக்தர்கள் வழிபட்டு இரவு 11:30 மணிக்கு திருக்கோயில் அடைந்தார்.
* எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்றிரவு 7:00 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.
அப்போது முக்கிய வீதிகளில் உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்
-
சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு
-
பாலம் அமைக்கும் பணிகள் தாமதம் மக்கள், மாணவர்கள் தவிப்பு
-
பள்ளியில் ஆசிரியர் தின விழா பரிசு வழங்கிய மாணவர்கள்
-
விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள் கவனமாக இருக்கணும்! முக்கிய 'ஸ்பாட்'களில் போலீசார் ஆய்வு
-
மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அடைப்பை நீக்க பணியாளர்கள் அச்சம் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்
Advertisement
Advertisement