கல்லுாரியில் டைப்ரைட்டிங் தேர்வு

கீழக்கரை: அரசு டைப்ரைட்டிங் தேர்வுகள் செப். 5, 6ல் ராமநாதபுரம் மையம் சார்பில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது.

டைப்ரைட்டிங் தேர்வுகள் தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவில் நடந்தது. கீழக்கரை, பரமக்குடி ஆகிய இடங்களில் 3000 பேர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் சேக் தாவூது, முதன்மை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், வணிகவியல் பள்ளிகள் சங்க மாநில இணைச்செயலாளர் சரவணபவா, மாவட்டத் தலைவர் முருகபூபதி, மாவட்ட பொருளாளர் குஞ்சரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement